தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதக் கடத்தல்: பயங்கரவாதிகள் சதி

2 mins read
63c91b80-3e64-452e-858a-72d516267c74
-

ஸ்ரீந­கர்: பாகிஸ்­தான் ஆத­ரவு பெற்ற பயங்­க­ர­வா­தி­கள் ஆயுத விநி­யோ­கத்­துக்­காக ஆளில்லா சிறிய ரக விமா­னங்­க­ளைப் (ட்ரோன்) பயன்­படுத்­து­வது தெரி­ய­வந்­துள்­ளது.

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக இந்­தியா, பாகிஸ்­தான் எல்­லைப் பகு­தி­களில் சிறிய ரக விமா­னங்­கள் தொடர்ந்து பறப்­ப­தாக பாது­காப்­புப் படை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

கடந்த 2019ஆம் ஆண்டு எல்­லை­யில் 167 ஆளில்லா விமா­னங்­கள் பறந்­த­தா­க­வும் அடுத்த ஆண்­டில் 77 சிறிய விமா­னங்­கள் பறந்­த­தா­க­வும் தெரி­ய­வந்­துள்­ளது.

எல்­லைக்கு அப்­பால் இருந்து ஆளில்லா விமா­னங்­கள் மூலம் கடத்தி வரப்­படும் ஆயு­தங்­கள், வெடி­குண்­டு­களை பாது­காப்­புப் படை­யி­னர் அவ்­வப்­போது கைப்­பற்றி வரு­கின்­ற­னர்.

கடந்த மாதம் 16 கையெறி குண்­டு­கள், ஏகே 47 ரக துப்­பாக்­கி­கள், அவற்­றுக்­கான தோட்­டாக்­கள், கைத்­துப்­பாக்­கி­கள், வெடி­பொ­ருள்­கள் ஆகி­யவை சிறிய ரக விமா­னம் மூலம் காஷ்­மீ­ருக்கு அனுப்­பப்­பட்­டது என்­றும் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் ஆயு­தங்­க­ளைக் கைப்­பற்­று­வ­தற்­குள் கையும் கள­வு­மாக பிடி­பட்­ட­னர் என்­றும் ஜம்மு போலி­சார் தெரி­வித்­துள்­ள­னர்.

இதே­போல் கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் 11 கையெறி குண்­டு­க­ளு­டன் பஞ்­சாப் எல்­லைக்­குள் நுழைந்த ஆளில்­லாத விமா­னத்தை போலி­சார் கைப்­பற்­றி­னர். சில தரு­ணங்­களில் ஆளில்லா சிறிய ரக விமா­னங்­களை பாது­காப்­புப் படை­யி­னர் சுட்டு வீழ்த்­திய சம்­ப­வங்­களும் நடந்­துள்­ளன.

இந்த விமா­னங்­கள் தாழ்­வா­கப் பறக்­கக்­கூ­டி­யவை என்­ப­தால் ராணுவ ரேடார்­க­ளின் பார்­வை­யில் சிக்­கு­வ­தில்லை. எனவே, எல்லை கடந்து ஆயு­தங்­க­ளைக் கடத்­து­வ­தில் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு இவை வெகு­வாக உத­வு­கின்­றன.

கடந்த ஆண்டு பஞ்­சாப் மாநி­லம் குரு­தாஸ்­பூர் பகு­திக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட 3 ஆளில்லா விமா­னங்­களில் ஆயு­தங்­க­ளு­டன் கள்ள நோட்­டு­களும் இருந்­தன.

தீவி­ர­வா­தி­க­ளின் இந்த உத்தி பாது­காப்­புப் படை­யி­ன­ருக்கு புதிய சவா­லாக உரு­வெ­டுத்­துள்­ளது. ஜம்மு விமா­னப்­ப­டைத் தளத்­தைக் குறி வைத்­துத் தாக்­கி­ய­தி­லும் ஆளில்லா விமா­னங்­கள் பயன்­படுத்தப்­பட்­டுள்­ளன.

அன்­றைய தினம் அவ்­வி­மா­னங்­கள் சுமந்­து­வந்த குண்­டு­கள் அதிக சக்தி வாய்ந்­தவை என்­ப­தால், இத்­தாக்­கு­த­லுக்­குப் பதி­லடி கொடுப்­ப­தி­லும் பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளைப் பலப்­ப­டுத்­த­வும் இந்­திய ராணு­வம் தீவிர நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கத் தெரி­கிறது.