'மாநிலக் கட்சி ஆட்சியே மாநிலங்களுக்கு நல்லது; தேசிய கட்சிகளைப் புறக்கணியுங்கள்'

'மாநிலக் கட்சி ஆட்சியே மாநிலங்களுக்கு நல்லது; தேசிய கட்சிகளைப் புறக்கணியுங்கள்'

1 mins read
d4a2da8d-657d-467d-b41c-b5f3aa8a0eaa
-

பெங்­க­ளூரு: "மத்­திய அர­சால் கர்­நா­ட­கத்­திற்கு இழைக்­கப்­படும் அநீ­தி­க­ளுக்கு எதி­ராக அனை­வ­ரும் ஒன்­று­பட்டு நிற்­கா­விட்­டால் நமது உரி­மை­களைக் காக்க முடி­யாது.

மாநில அர­சு­க­ளின் பிரச்­சி­னை­களை மத்­திய அரசு புறக்­க­ணித்து வரு­கிறது. மத்­திய அர­சின் இந்த புறக்­க­ணிப்­புக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்­டும் என்­றால், மாநி­லக் கட்­சிக்கு மக்­கள் ஆத­ரவு அளிக்க வேண்­டும் என்று கர்­நா­ட­கா­வின் முன்­னாள் முதல்­வர் குமா­ர­சாமி அம்­மா­நில மக்­க­ளைக் கேட்­டுக் கொண்­டார். மற்ற தென்­மா­நி­லங்­க­ளைப் போல் வரு­கிற 2023ஆம் ஆண்டு சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தேசிய கட்­சி­க­ளைப் புறக்­க­ணித்து ஜனதா தளம்(எஸ்) கட்­சியை ஆத­ரியுங்கள். டெல்­லி­யில் அமர்ந்து இங்கு ஆட்சி செய்­வதை மக்­கள் விரும்­பக்­கூடாது. தமி­ழ­கம், ஆந்­திரா, தெலுங்­கானா, மேற்கு வங்­கா­ளம் ஆகிய மாநி­லங்­களில் மாநி­லக் கட்­சி­களைத்தான் மக்­கள் ஆத­ரிக்­கி­றார்­கள். கர்­நா­ட­கத்தை ஆட்சி செய்த காங்­கி­ரஸ், பாஜக ஆட்­சி­கள் மாநி­லப் பிரச்­சி­னை­களைத் தீர்க்­க­வில்லை.

அது மொழி­யாக இருந்­தா­லும் சரி, நில­மாக இருந்­தா­லும் சரி, நீர் பிரச்­சி­னை­யாக இருந்­தா­லும் சரி.

அனைத்­துப் பிரச்­சி­னை­க­ளி­லும் கர்­நா­ட­கத்தை தேசிய கட்­சி­கள் அலட்­சி­யப்­ப­டுத்தி உள்­ளன என்­றார் குமா­ர­சாமி.