இந்திய இலக்கியங்கள் அன்பளிப்பு

இந்திய இலக்கியங்கள் அன்பளிப்பு

1 mins read
b8f44864-a621-4ea5-be1a-1a5d9d438ee0
-

புது­டெல்லி: ஜெய­காந்­த­னின் 'சில­நேரங்­களில் சில மனி­தர்­கள்' உள்­ளிட்ட இந்­திய மொழி­களில் எழு­தப்­பட்ட 10 புகழ்­பெற்ற நவீன இலக்­கிய நூல்­களை மொழி­பெ­யர்த்து, ஷாங்­காய் ஒத்­து­ழைப்பு அமைப்­புக்கு (எஸ்.சி.ஓ.) இந்­தியா பரி­ச­ளித்­துள்­ளது.

எஸ்.சி.ஓ. அமைப்­பில் சீனா, ரஷ்யா, கஜ­கஸ்­தான், கிர்­கிஸ்­தான், தஜி­கிஸ்­தான், உஸ்­பெ­கிஸ்­தான், இந்­தியா, பாகிஸ்­தான் ஆகி­யவை உறுப்பு நாடு­க­ளாக இடம்­பெற்­றுள்­ளன.

பெய்­ஜிங்­கில் உள்ள எஸ்.சி.ஓ. தலை­மை­ய­கத்­தில் செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில், வெவ்­வேறு இந்­திய மொழி­களில் எழு­தப்­பட்ட 10 புகழ்­பெற்ற நவீன இலக்­கிய நூல்­களை எஸ்.சி.ஓ., பொதுச் செய­லர் விளா­டி­மீர் நோரோ­வி­டம் சீனா­வுக்­கான இந்­திய தூதர் விக்­ரம் மிஸ்ரி வழங்­கி­னார்.

ஜெய­காந்­த­னின் 'சில­நே­ரங்­களில் சில மனி­தர்­கள்' (தமிழ்), தாரா­சங்­கர் பந்­தோ­பாத்­யாய எழு­திய ஆரோக்ய நிகே­தன் (வங்­கா­ளம்), ராஜேந்­திர சிங் பேடி­யின் 'ஏக் சதர் மைலி ஸி' (உருது), ரச்­ச­கொண்டா விஸ்­வ­நாத சாஸ்­தி­ரி­யின் 'இல்லு' (தெலுங்கு), எஸ்.எல்.பைரப்பா எழு­திய 'பர்வ' (கன்­ன­டம்) உள்­ளிட்ட அசாம், குஜ­ராத்தி, இந்தி மொழிகளில் தலா ஒரு நூல் சீன, ரஷ்ய, ஆங்­கில மொழி­களில் மொழி­பெ­யர்க்­கப்­பட்டு பரி­ச­ளிக்­கப்­பட்­டது.