தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியப் பயணிகளுக்கு மாலத்தீவு அனுமதி

2 mins read
be75f91a-e1fc-4fea-b3a7-f5b3315b90f9
-

புது­டெல்லி: கொவிட்-19 தொற்­றின் இரண்­டாம் அலை கார­ண­மாக மே மாதம் 13ஆம் தேதி இந்­தியா உள்­ளிட்ட தெற்­கா­சிய நாட்­ட­வ­ருக்கு மாலத்­தீவு அரசு பய­ணத் தடை விதித்­தது. இந்­தி­யா­வில் கொரோனா இரண்­டா­வது அலை குறைந்து வரு­கிறது. அதனால், மாலத்தீவு மெது­வாக இந்­தி­ய நாட்டவர்களுக்குக் கத­வு­களை மீண்­டும் திறக்­கத் தொடங்­குகிறது. ஜூலை 15 ஆம் தேதி முதல் இந்­தியா உள்­ளிட்ட தெற்­கா­சிய நாடு­களைச் சேர்ந்­த­வர்­கள் மாலத்­தீ­வு­க­ளுக்கு வருவதற்கு அனு­மதி வழங்­கப்­படும் என அதி­பர் இப்­ரா­கிம் முகம்­மத் சோலிஹ் அறி­வித்­துள்­ளார். பய­ணம் மேற்­கொள்­வோர் தங்­க­ளுக்கு கொவிட்-19 தொற்­றுப் பாதிப்பு இல்­லை­யென சான்­றி­தழ் பெற்­றி­ருக்க வேண்­டும்.

சுற்­று­லாவை நம்பி இருக்­கும் மாலத்­தீவில் 80 விழுக்­காட்­டிற்கு மேல் நீர்தான் இருக்­கிறது.

ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட தீவு­க­ளின் தொகுப்பு மாலத்­தீவு. அழ­க­ழ­கான கடற்­க­ரை­கள், இயற்­கைக் காட்­சி­கள் என சுற்­று­லாப் பய­ணி­களைக் கவ­ரும் பல அம்சங்கள் மாலத்­தீ­வில் உள்­ளன. மாலத்­தீ­வின் தலை­ந­க­ரான மேலில் இருக்­கும் தேசிய அருங்­காட்­சி­ய­கம், ஹுல் ஹுமாலே தீவு ஆகி­யவை சுற்­று­லாப் பய­ணி­கள் அதி­கம் சுற்­றிப்­பார்க்­கும் முக்­கிய இடங்­கள். மேலில் இருக்­கும் வெள்ளி ஜும்மா மசூதி உல­கின் பழ­மை­யான மசூ­தி­களில் ஒன்று. மாலத்­தீ­வில் சுற்­று­லாத் தலம் எல்­லாமே தீவு­களை ஒட்­டி­ய­வை­தான். மாலத்­தீ­விற்கு கொச்­சி­யில் இருந்து கப்­பல் மூல­மா­கவோ, சென்­னை­யில் இருந்து விமா­னம் மூல­மா­கவோ செல்­ல­லாம்.

கப்­பல் மூலம் செல்­வ­தற்கு ஒன்­றில் இருந்து இரண்டு நாட்­கள் ஆகும். விமா­னம் மூலம் செல்­வ­தற்கு இரண்டு மணி­நே­ரம் ஆகும். இந்­திய நாட்­ட­வர்க்கு அங்கு செல்ல விசா தேவை­யில்லை. பய­ணம் செய்­தாலே அங்கு 90 நாள்­க­ளுக்­கான விசா வழங்­கப்­படும். மாலத்­தீ­வுக்கு இந்­தியா, ரஷ்யா போன்ற நாடு­களில் இருந்தே அதி­க­மா­னோர் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்­கின்­ற­னர்.

மேலும் உக்­ரேன், ஜெர்­மனி, கஜகஸ்­தான் ஆகிய நாடு­களில் இருந்­தும் ஏரா­ள­மான பய­ணி­கள் வந்­து­செல்­கின்­ற­னர்.

இந்த ஆண்டு ஜன­வரி மாதத்­தில் இருந்து அங்கு 400,000க்கு மேற்­பட்ட சுற்­றுலாப் பய­ணி­கள் வருகை மேற்­கொண்­டுள்­ள­னர்.