தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.8.6 லட்சம் மின்கட்டண பாக்கி: சித்து மீது புகார்

1 mins read
64eb03ba-76d7-4743-9d64-33670921f9d2
பஞ்சாப் மாநிலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மின்வெட்டைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று முன்தினம் சண்டிகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலிசார் தண்ணீர் பீய்ச்சி கூட்டத்தைக் கலைத்தனர். படம்: ஏஎஃப்பி -

சண்­டி­கர்: முன்­னாள் கிரிக்­கெட் வீரர் நவ்­ஜோத்­சிங் சித்து எட்டு லட்­சம் ரூபாய் அள­வுக்கு மின்­கட்­டண பாக்கி வைத்­துள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

பஞ்­சாப் முதல்­வர் அம்­ரேந்­தர் சிங், அம்­மா­நில முன்­னாள் அமைச்­சர் சித்து ஆகி­யோர் இடையே மோதல் நிலவி வரு­கிறது. இந்­நி­லை­யில் அம்­மா­நி­லத்­தில் மின்­வெட்டு அதி­க­ரித்­தி­ருப்­பதை அடுத்து ஆளும் காங்­கி­ரஸ் அரசை கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளார் சித்து.

முதல்­வர் சரி­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கா­ததே மின்­வெட்­டுக்­கான கார­ணம் என்­றும் அண்­மை­யில் அவர் சாடி­னார். இந்­நி­லை­யில் அமிர்­த­ச­ர­சில் உள்ள தனது வீட்­டுக்­கான மின்­கட்­ட­ணத்தை அவர் செலுத்­த­வில்லை என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

கட்­ட­ணம் செலுத்­து­வ­தற்­கான கடைசி தேதி­யும் முடிந்­து­விட்ட நிலை­யில் சித்து ரூ.867,540 மின்­கட்­ட­ணம் செலுத்த வேண்­டும் என மின்­சார வாரி­யம் தெரி­வித்­துள்­ளது.