உள்நாட்டு விமானப் பயணம்: 65% பயணிகளுக்கு அனுமதி

புதுடெல்லி: உள்நாட்டு விமானங்களில் 65 விழுக்காடு இருக்கைகளைப் பயணிகளுக்கு ஒதுக்கலாம் என விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இதையடுத்து உள்நாட்டு விமானப் போக்குவரத்து மிக விரைவில் இயல்பு நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா கிருமித்தொற்று நெருக்கடியால் விமானப் போக்குவரத்துத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விமானச் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.

பாதிப்பு ஓரளவு குறையத் தொடங்கியதும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 50 விழுக்காடு பயணிகளுடன் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. தற்போது 65 விழுக்காடு விமான இருக்கைகளை நிரப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை உட்பட ஊரடங்கு தளர்த்தப்பட்ட நகரங்களில் இருந்து அதிகப்படியான விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!