போபால்: கூடைப்பந்தாட்ட மைதானத்தில் பிரக்யா தாகூரின் 'ஸ்லாம் டங்கின்' காணொளி இணையத்தில் வலம் வந்த சில நாட்களுக்குப் பிறகு, பாஜக எம்.பி., அவர் ஏற்பாடு செய்ய உதவிய திருமணத்தில் நடனமாடுவதைக் காட்டும் ஒரு காணொளியும் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோரிய அரசியல்வாதியான திருவாட்டி பிராக்யா குறித்து இந்த காணொளிகள் எதிர்க்கட்சியான காங்கிரசிலிருந்து கருத்துக்களை எடுத்துள்ளன.
அண்மைய காணொளி காட்டிய இரட்டை திருமணம் போபால் இல்லத்தில் நடைபெற்றது. மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்கள். 51 வயதான பிரக்யா தாகூர் கொண்டாட்டத்தில் ஒரு காலை அசைத்து, மக்களை அதில் சேருமாறு கேட்டுக்கொண்டதை அந்தக் காணொளி காட்டியது
மணப்பெண் செய்தியாளர்களிடம் தாம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும் கூறினார்.
மணப்பெண்ணின் தந்தை, தினசரி கூலி தொழிலாளி, தனது மகளின் திருமணத்தை ஏற்பாடு செய்ய வழி இல்லாததால் உதவிக்கரம் நீட்டிய போபால் எம்.பி.க்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
"எனக்கு இரண்டாவது வாழ்க்கை வழங்கப்பட்டதைப் போல நான் உணர்கிறேன். நான் மிகவும் ஏழைமையில் உள்ளவன். என் மகள்களை திருமணம் செய்து வைக்க எனக்கு போதுமான வசதி இல்லை. ஆனால் பிரக்யா தாகூர் எங்களுக்கு உதவினார். அவரது நீண்ட ஆயுளுக்காக நான் தெய்வத்தைப் பிரார்த்திக்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் நன்றியுடனும் இருக்கிறேன், "என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.