உ.பி.யில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்

2 mins read
d3409519-f8bd-4f42-914c-88fab159d635
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்படவுள்ளது. படம்: நியூஸ்18 -

லக்னோ: மக்­கள் தொகை கட்­டுப்­பாடு என்ற பெய­ரில் பார­திய ஜனதா கட்சி ஆளும் மாநி­லங்­களில் புதிய சட்­டம் கொண்டு வரப்­ப­டு­கிறது.

அசாம் மாநி­லத்­தில் ஹிமந்தா பிஸ்வா தலை­மை­யில் பாஜக ஆட்சி அமைந்­த­தும், இது­தொ­டர்­பான மசோதா கொண்டு வரப்­பட்­டது. இரண்டு குழந்­தை­க­ளு­டன் நிறுத்­திக்­கொண்­டால்­தான் அரசு வேலை­யும், அரசு நலத்­திட்­ட­மும் கிடைக்­கும் என்ற சட்­ட­முன்­வ­ரைவு அம்­மா­நிலச் சட்­டப்­பே­ர­வை­யில் தாக்­கல் செய்­யப்­பட உள்­ளது.

இந்­நி­லை­யில், இதே­போல் உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்­தி­லும் மக்­கள் தொகை­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­குப் புதிய சட்­டம் ஒன்றை இயற்ற அம்­மா­நில அரசு முன்­வந்­துள்­ளது. உ.பி. மாநில சட்ட கமி­ஷன் அந்­தச் சட்­டத்­திற்­கான வரைவு மசோ­தாவை இணை­யத்­தில் வெளி­யிட்­டுள்­ளது.

'உ.பி. மக்­கள் தொகை (கட்­டுப்­பாடு, உறு­திப்­ப­டுத்­தல் மற்­றும் நலன்­கள்) சட்­ட­முன்­வ­ரைவு, 2021' என்ற சட்­டம் விரை­வில் இயற்­றப்­பட உள்­ளது.

இணை­யத்­தில் வெளி­யி­டப்­பட்­டுள்ள இந்த மசோதா குறித்து வரும் 10 நாட்­களில் மக்­கள் கருத்­துக்­கூ­ற­லாம். அதன்­பின் ஜூலை 19ஆம் தேதி இந்­தச் சட்­டம் குறித்து இறுதி முடிவு எடுக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இரண்டு குழந்­தை­க­ளுக்கு மேல் பெற்­றுக்­கொள்­வ­தைத் தடுப்­பதே இச்­சட்­டத்­தின் நோக்­கம். இரண்டு குழந்­தை­க­ளுக்கு மேல் பெற்­றுக்­கொண்­டால் அர­சின் எந்த நலத்­திட்ட உத­வி­களும் அரசு வேலைகளும் கிடைக்­காது. உள்­ளாட்­சித் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யாது.

ஒன்றுக்கு மேற்பட்ட மணம் செய்­தால், ஒவ்­வொரு தம்­ப­தி­யி­ன­ரும் ஒரு தம்­ப­தியராக கணக்­கி­டப்­ப­டு­வார்­கள், இதன் மூலம், குழந்­தை­க­ளின் எண்­ணிக்கை கணக்­கில் கொள்­ளப்­படும். புதிய சட்டத்தின்படி, ஒரே குழந்­தை­யோடு கருத்­தடை அறுவை சிகிச்சை செய்­து­கொள்­ப­வர்­க­ளுக்கு பல்­வேறு சலு­கை­கள் கிடைக்­கும்.

ஓராண்டு ஊதி­யத்­து­டன் மகப்­பேறு விடுப்பு, குடி­நீர், மின்­சா­ரம், வீட்டு வரி கட்­ட­ணத் தளர்வு, இல­வச மருத்­துவ சிகிச்சை, இல­வ­சக் காப்­பு­றுதி, பள்ளிச் சேர்க்­கை­யில் முன்­னு­ரிமை, பெண் குழந்­தை­க­ளுக்­கு இல­வ­சக் கல்வி, கல்வி உத­வி­நிதி, அரசு வேலை போன்ற சலு­கை­கள் கிடைக்­கும்.

2012ஆம் ஆண்டு மக்­கள் தொகை கணக்­கெ­டுப்­பின் படி, உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் 20.43 கோடி பேர் வசிக்­கின்­ற­னர். அங்கு மக்­கள் தொகை கட்­டுக்­க­டங்­கா­மல் அதி­க­ரித்­துக் கொண்­டி­ருப்­ப­தால் அதி­ரடி நட­வ­டிக்­கை­களை எடுக்க திட்­ட­மிட்­டுள்­ளார் முத­ல­மைச்­சர் யோகி ஆதித்­ய­நாத்.

இந்­தச் சட்­டம், உ.பி.யில் அடுத்த ஆண்டு நடை­பெற உள்ள சட்­ட­மன்­றத் தேர்­த­லில் பெரிய அள­வில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.