ஜம்மு-காஷ்மீரில் புலனாய்வுத் துறை சோதனை; 5 பேர் கைது

ஜம்மு-காஷ்மீரில் புலனாய்வுத் துறை சோதனை; 5 பேர் கைது

1 mins read
989a06a8-d4dc-4372-b47e-2f7565e526f5
-

புது­டெல்லி: தேசிய புல­னாய்வு அமைப்பு ஜம்மு - காஷ்­மீ­ரில் பல இடங்­களில் அதி­ர­டிச் சோதனை மேற்­கொண்டு வரு­கிறது. இந்­தச் சோத­னை­யின்­போது பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நிதி வழங்­கி­ய­தன் சந்­தே­கத்­தின் பேரில் ஐந்து பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

பயங்­க­ர­வா­தத்­துக்கு நிதி­ய­ளித்­தது குறித்த வழக்கு தொடர்­பாக இந்த சோதனை நடை­பெற்­றது. அனந்த்­னாக் என்ற பகு­தி­யில் நான்கு இடங்­களில் நடை­பெற்ற சோத­னை­யி­லும், ஸ்ரீந­க­ரில் நடை­பெற்ற சோத­னை­யி­லும் ஐந்து பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

என்­ஐஏ-யின் சோதனை இன்­னும் பல இடங்­களில் நடை­பெற்று வரு­கிறது. மேலும் பலர் கைதா­க­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு ஆத­ர­வா­கச் செயல்­பட்­ட­தா­கக் கரு­தப்­படும் 11 அரசு ஊழி­யர்­களை ஜம்மு - காஷ்­மீர் யூனி­யன் பிர­தேச நிர்­வா­கம் பணி­யில் இருந்து நீக்­கி­யுள்­ளது. நீக்­கப்­பட்ட அரசு ஊழி­யர்­களில் ஹிஸ்­புல் முஜா­ஹி­தின் பயங்­க­ர­வாத அமைப்­பின் தலை­வர் சலா­லு­தீ­னின் மகன்­கள் சையது அக­மது ஷகீல், ஷாகித் யூசுப் ஆகி­யோ­ரும் அடங்­கு­வர்.

இவர்­கள் அனை­வ­ரும் பயங்­க­ர­வாத இயக்­கத்­திற்கு ஆத­ர­வா­கச் செயல்­பட்டு வரு­கின்­ற­னர் என்று யூனி­யன் பிர­தேச நிர்­வா­கத்­திற்­குப் புகார்­கள் வந்­தன. அத­னை­ய­டுத்து அவர்­கள் குறித்து விசா­ரிக்க அந்த நிர்­வா­கம் உத்­த­ர­விட்­டது. விசா­ர­ணை­யில் போலிஸ், கல்வி, விவ­சா­யம், திறன் மேம்­பாடு, மின்­சா­ரம், சுகா­தா­ரம் ஆகிய துறை­களில் பணி­யாற்­றும் 11 ஊழி­யர்­கள், பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுக்கு ஆத­ர­வா­கச் செயல்­ப­டு­வது உறு­தி­யா­னது.