'பொருளியல் மீட்சி மிக வலுவாக இருக்கும்'

'பொருளியல் மீட்சி மிக வலுவாக இருக்கும்'

1 mins read
2fc28a55-00c7-42d9-9a8b-5061a6d58da7
-

புது­டெல்லி: பல்­வேறு துறை­களில் முன்­னேற்­றத்­துக்­கான நல்ல அறி­குறி­கள் தென்­ப­டு­வ­தால் நடப்பு நிதி­யாண்­டின் இரண்­டாம் பாதி­யில் பொரு­ளியல் மீட்சி மிக வலு­வாக இருக்­கும் என மத்­திய நிதி ஆயோக் அமைப்­பின் துணைத் தலை­வர் ராஜீவ் குமார் தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா மூன்­றா­வது அலை வந்­தா­லும் பொரு­ளி­யல் மீதான தாக்­கம் குறை­வா­கவே இருக்­கும் என்று திரு ராஜீவ் குமார் கணித்­தி­ருக்­கி­றார்.

மூன்­றா­வது அலையை எதிர்­கொள்ளத் தயா­ராக இருப்­ப­தா­க­வும் மத்­திய அரசு அனைத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொண்­டுள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி இரட்டை இலக்­கத்தில் இருக்­கும் என நம்­பு­கி­றேன். இரும்பு, சிமென்ட், சொத்துச் சந்தை போன்ற நுகர்வோரைச் சார்ந்த துறை­கள் மீள்­வ­தற்குச் சற்றுக் கூடுதல் காலம் ஆக­லாம்.

"ஏனெ­னில், தொற்­று­நோய் கார­ண­மாக நிச்­ச­ய­மற்ற தன்மை இருப்­ப­தால், நுகர்­வோர் சற்று தயங்­கு­கின்­ற­னர். எனவே, தனி­யார் முத­லீடு மீட்பு நட­வ­டிக்­கை­களை நடப்­பாண்­டின் மூன்­றாம் காலாண்­டில் எதிர்­பார்க்­க­லாம்," என்று ராஜீவ் குமார் கூறி­யுள்­ளார்.

கடந்த மார்ச் 31ஆம் தேதி­யு­டன் முடி­வ­டைந்த 2020-21ஆம் நிதி­யாண்­டிற்­கான இந்­தி­யா­வின் பொருளியல் வளர்ச்சி 'மைனஸ்' 7.3 விழுக்காடாக சரிந்­தது.

இத­னால், நடப்­பாண்­டின் பொரு­ளியல் வளர்ச்­சி­யி­லும் கொரோனா பாதிப்­பின் தாக்­கம் இருக்­கும் என பல ஆய்வு நிறு­வ­னங்­கள் கணித்­துள்­ளன.