புதுடெல்லி: கொரோனா நெருக்கடி காரணமாக சீனாவில் படித்து வரும் கிட்டத்தட்ட 23 ஆயிரம் இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பான்மையோர் மருத்துவம் பயின்று வருகின்றனர்.
கொரோனா தொற்றுப்பரவல் தொடங்கியதும் நாடு திரும்பிய இவர்களில் பெரும்பாலார் மீண்டும் சீனா செல்ல முடியவில்லை. கடந்த 17 மாதங்களாக இவர்கள் இணையம் வழி கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் இந்திய மாணவர்களுக்குச் சீனா செல்வதற்கான அனுமதி கிடைக்கும் என மத்திய கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

