திரிசூர், கேரளா: இந்தியாவின் முதல் கொவிட் -19 நோயாளியாக இருந்த ஒரு பெண் மருத்துவர், மீண்டும் அதே கிருமியால் நோய்வாய்ப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் இன்று கேரளா- திரிசூரில் தெரிவித்துள்ளனர்.
"அவர் கொவிட்-19 நோயால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார் . அவரது ஆர்டி-பிசிஆர் பாசிட்டிவ், ஆன்டிஜென் நெகட்டிவ். அவர் அறிகுறியற்றவர்" என்று திருச்சூர் மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் கே.ஜே.ரீனா செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு தெரிவித்தார்.
"அவர் புதுடெல்லிக்கு ஆய்வு நோக்கங்களுக்காக செல்லத் தயாராக இருந்ததால் அவரது மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. பின்னர் ஆர்டி-பிசிஆர் முடிவு பாசிட்டிவ் ஆக மாறியது" என்று அவர் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு தெரிவித்தார்.
அந்தப் பெண் தற்போது வீட்டில் இருப்பதாகவும் அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவர் பிடிஐ இடம் கூறினார்.