தமிழ் கல்வெட்டுகளைப் பதிப்பிக்கும் பணி பாதிப்பு

தமிழ் கல்வெட்டுகளைப் பதிப்பிக்கும் பணி பாதிப்பு

1 mins read
0ae8d7cf-2b17-4b83-9dac-baf0415eef4f
-

புது­டெல்லி: தமிழ் கல்­வெட்­டு­க­ளைப் பதிப்­பிக்­கும் பணி பாதிக்­கப்­பட்­டுள்­ளது கவலை அளிப்­ப­தாக தமிழ் ஆர்­வ­லர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­திய தொல்­பொ­ருள் ஆய்­வுக்­க­ழ­கத்­தில் கல்­வெட்­டி­யல் துறை­யில் தற்­போது கல் வெட்­டி­ய­லா­ளர்­க­ளுக்கு பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளதே இதற்­குக் கார­ணம் என ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

தொல்­லி­யல் சார்­பில் கண்­டு­பி­டிக்­கப்­படும் கல்­வெட்­டு­கள் 'படி எடுத்­தல்' முறை­யில் காகித நகல்­க­ளாக சேக­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

1886ஆம் ஆண்டு தொடங்கி கல்­வெட்­டு­கள் சேக­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

காகித நகல்­க­ளின் ஆயுள் 75 ஆண்­டு­கள். அதற்­குள் அவற்­றைப் படித்து ஆங்­கில மொழி­பெ­யர்ப்­பு­டன் பதிப்­பிப்­ப­து­தான் கல்­வெட்­டு ஆய்வாளர்களின் பணி­யா­கும்.

இந்­நி­லை­யில், தொல்­பொ­ருள் ஆய்­வுக்­க­ழ­கத்­தில் போது­மான கல்­வெட்­டி­ய­லா­ளர்­கள் இல்­லா­த­தால் கல்­வெட்டு பதிப்­பிக்­கும் பணி பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே, காலிப் பணி­யி­டங்­களை நிரப்ப வேண்­டும் என தமிழ் ஆர்­வ­லர்­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.