ஒரு குழந்தை கொள்கை: விசுவ இந்து பரிஷத் கவலை

ஒரு குழந்தை கொள்கை: விசுவ இந்து பரிஷத் கவலை

1 mins read
8c6b19c1-8547-4e0b-95c7-8b562913015b
-

லக்னோ: உத்­த­ரப் பிர­தேச அர­சின் ஒரு குழந்தை கொள்­கை­யால் இந்­துக்­க­ளின் எண்­ணிக்கை குறை­யும் ஆபத்து உள்­ள­தாக விசுவ இந்து பரி­ஷத் அமைப்பு கூறி­யுள்­ளது.

இந்­தக் கொள்­கையை அம்­மா­நில அரசு கைவிட வேண்­டும் என­வும் கேட்டுக் கொண்­டுள்­ளது.

உத்­த­ரப் பிர­தே­சத்­தில் இரண்டு குழந்­தை­க­ளுக்கு மேல் பெற்­றால் உள்­ளாட்­சித் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யாது, அர­சுப் பணி கிடைக்­காது, ஒரு குழந்தை மட்­டும் பெற்­றுக் கொண்­டால் கூடு­தல் சலு­கை­கள் கிடைக்­கும் என்­பன உள்­ளிட்ட அம்­சங்­க­ளு­டன் புதிய சட்­டம் ஒன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட உள்­ளது.

இந்­நி­லை­யில், ஒரு குழந்­தையை மட்­டும் வளர்க்­கும் பெற்­றோர், எதிர்­பாரா கார­ணத்­தால் அந்த குழந்­தையை இழக்க நேரிட்­டால் அவர்­கள் பெரும் துய­ரத்தை எதிர்­கொள்ள நேரி­டும் என விஸ்வ இந்து பரி­ஷத் சுட்­டிக்­காட்டி உள்­ளது.

எனவே இந்­தக் கொள்­கையை அம்­மா­நில அரசு கைவிட வேண்­டும் என­வும் கேட்­டுக் கொண்­டுள்­ளது.