தேர்தல் களம் காணத் தயாராகும் விவசாயிகள்

தேர்தல் களம் காணத் தயாராகும் விவசாயிகள்

1 mins read
18c83108-4396-4868-8581-61e6a18bfc27
-

புது­டெல்லி: வேளாண் சட்­டங்­களை எதிர்த்­துப் போரா­டும் விவ­சா­யி­கள் தேர்­தல் களம் காண்­ப­தில் தவ­றே­தும் இல்லை என விவ­சாய சங்­கத் தலை­வர்­களில் ஒரு­வ­ரான ராகேஷ் திகா­யத் தெரி­வித்­துள்­ளார்.

டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், சில மாநி­லங்­களில் நடை­பெற உள்ள சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல்­களில் விவ­சா­யி­கள் போட்­டி­யிட வாய்ப்­புள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

"தேர்­தல்­களில் வாக்­க­ளித்து வெற்றி பெற வைப்­பது விவ­சா­யி­கள் தான். அந்த விவ­சா­யி­கள் தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­வது எப்­படி தவ­றா­கும்?" என கேள்வி எழுப்­பி­யுள்­ளார் ராகேஷ் திகா­யத்.

உத்­த­ரப்­பி­ர­தே­சம், உத்­த­ர­காண்ட், இமாச்­சலப் பிர­தே­சம், பஞ்­சாப், கோவா, மணிப்­பூர், குஜராத் ஆகிய எட்டு மாநி­லங்­களில் அடுத்த ஆண்டு சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற உள்­ளது.