திருவனந்தபுரம்: ஐக்கிய அமீரக சிற்றரசு தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்கக்கடத்தலில் ஈடுபட்ட ஸ்பவ்னா சிறையில் தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியுள்ளார்.
எனவே, தம்மை கேரளாவில் உள்ள வேறு சிறைக்கோ அல்லது வேறு மாநில சிறைக்கோ மாற்ற வேண்டும் என அவர் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னாவை வேறு மாநில சிறைக்கு மாற்றுவது குறித்து அவர் மீது வழக்கு தொடுத்துள்ள மத்திய சுங்க இலாகா ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இதே வழக்கில் சிக்கியுள்ள மேலும் இருவர் தங்களை சிறை மாற்றக் கோரி மனு அளித்துள்ளனர்.

