கேரளாவில் ஊரடங்கு நீட்டிப்பு

2 mins read
84addaad-99eb-4d78-afe3-d84c9e863a38
-

கொரோனாவுடன் டெங்கியும் ஸிக்கா கிருமித்தொற்றும் மக்களை அச்சுறுத்தி வருகிறது

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள மாநி­லம் கொரோனா கிரு­மித்­தொற்­றின் அலை­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­குத் திணறி வரு­கிறது. தின­சரி தொற்று எண்­ணிக்கை 14,000ஐத் தாண்டி நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­கொண்டே செல்­கிறது.

கேர­ளா­வில் செவ்­வாய்க்­கி­ழமை நில­வ­ரப்­படி 14,539 பேர் புதி­தா­கத் தொற்றால் பாதிக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. 10,331 பேர் தொற்­றில் இருந்து குண­ம­டைந்து மருத்­து­வ­ம­னை­யில் இருந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர். 115,174 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். மொத்­தம் 3,087,673 பேருக்கு தொற்று பாதிப்பு உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. 14,810 பேர் தொற்­றுக்­குப் பலி­யா­கி­விட்­ட­னர். அத்­து­டன் அங்கு ஸிக்கா கிரு­மித்தொற்­றும் டெங்­கிக் காய்ச்­ச­லும் மக்­களை அச்­சு­றுத்தி வரு­வ­தால் அம்­மா­நி­லத்­தின் முதல் அமைச்­சர் பின­ராயி விஜ­யன், வரும் சனி, ஞாயிற்­றுக்­கி­ழமை ஆகிய இரண்டு நாட்­க­ளி­லும் முழு ஊர­டங்கை நீட்­டிப்­ப­தாக அறி­வித்­துள்­ளார்.

வார நாட்­களில் வங்­கி­களும் அத்­தியாவசியப் பொருட்­கள் விற்­பனை செய்­யும் கடை­களும் திறக்க அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. கடை­கள் இரவு 8 மணி வரை திறந்­தி­ருக்­க­லாம். தொற்று அதி­கம் உள்ள பகு­தி­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட மண்­ட­ல­மாக அறி­விக்க உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­து­டன் அப்­ப­கு­தி­யில் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் கடைப்­பி­டிக்­கப்­படும்.

ஊர­டங்கு காலத்­தில் பொது­மக்­கள் தேவை­யின்றி தங்­கள் வீடு­களை விட்டு வெளி­யில் செல்­லக்­கூ­டாது என்­றும் முக்­கி­யத் தேவை­க­ளுக்கு வெளி­யில் செல்­லும்­போது பொது இடங்­களில் கண்­டிப்­பாக முகக்­க­வ­சம் அணிந்தே செல்ல வேண்­டும் என்றும் மாநில அரசு மக்­க­ளைக் கேட்­டுக் கொண்­டுள்­ளது. இந்­நி­லை­யில், முழு ஊர­டங்கு கார­ண­மாக வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­ப­டு­வ­தா­க­வும், எனவே கடை­க­ளைத் திறக்க அரசு அனு­ம­திக்க வேண்­டும் என்­றும் கேரள வியா­பா­ரி­கள் முதல்­வ­ரி­டம் கோரிக்கை விடுத்து இருந்­த­னர்.

இது குறித்து முதல் அமைச்­சர் பின­ராயி விஜ­யன் கூறி­ய­தா­வது:

"கடை­க­ளை­யும் வர்த்­தக நிறு­வ­னங்­க­ளை­யும் திறந்­து­விட வேண்­டும் என்றே அனை­வ­ரும் விருப்­பப்­ப­டு­கி­றோம். ஆனால், அதற்­கான நேரம் இது­வல்ல. எனவே, வியா­பா­ரி­களும் பொது­மக்­களும் பொறுமை காப்பதால் மட்டுமே நாம் கொரோனா கிருமியிடம் இருந்து நம்­மைப் பாது­காத்­துக் கொள்­ள­முடி­யும். கிரு­மித்­தொற்று ஓர­ள­வுக்­குக் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பின், படிப்­ப­டி­யாக தளர்­வு­கள் அறி­விக்­கப்­படும்," என்று கூறி­னார்.

இந்­நி­லை­யில் கடந்த 12 நாட்­களில் மட்­டும் இந்­தப் பகு­தி­களில் 288 பேருக்கு டெங்­கிக் காய்ச்­சல் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 1,037 பேருக்கு டெங்கி சோதனை மேற்­கொள்­ளப்­பட்­ட­தில் அவர்­களில் 288 பேருக்கு டெங்கி பாதிப்பு பதி­வா­கி­யுள்­ளது. காசர்­கோடு, கோழிக்­கோடு மற்­றும் எர்­ணா­கு­ளம் மாவட்­டங்­களில் அதிக எண்­ணிக்­கை­யி­லான டெங்­கிக் காய்ச்­சல் பதி­வா­கி­யுள்­ளது. ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.