அல்காய்தா ஆதரவு பயங்கரவாதிகள் மூவர் லக்னோவில் கைது

அல்காய்தா ஆதரவு பயங்கரவாதிகள் மூவர் லக்னோவில் கைது

1 mins read
76d44aa8-8f24-4f06-89aa-bc8a007d2eba
-

லக்னோ: அல்காய்தா பயங்­க­ர­வாத அமைப்­பு­டன் தொடர்­பு­டைய மேலும் மூன்று பயங்­க­ர­வா­தி­களை உத்­த­ரப்பிர­தேச காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

அம்­மா­நி­லத்­தின் தலை­ந­கர் லக்­னோ­வில் உள்ள வாசிர்­கஞ்ச் பகு­தி­யில் மேற்­கொண்ட அதி­ரடி நட­வ­டிக்­கை­யின் போது மூவ­ரும் போலி­சா­ரி­டம் சிக்­கி­னர்.

எதிர்­வ­ரும் இந்­திய சுதந்­தி­ர தினத்­தை­யொட்டி நாடு முழு­வ­தும் பாது­காப்பு ஏற்­பா­டு­கள் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில், உத்­த­ரப் பிர­தே­சத்­தில் பயங்­க­ர­வா­தி­கள் நாச வேலை­களை அரங்­கேற்ற திட்­ட­மிட்­டி­ருப்­ப­தாக கிடைத்த தக­வலை அடுத்து, காவல்­துறை தீவிர கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, கடந்த 11ஆம் தேதி பயங்­க­ர­வாத தடுப்­புப் படை­யி­னர் அல் காய்தா ஆத­ரவு பயங்­க­ர­வா­தி­கள் இரு­வரை லக்­னோ­வில் கைது செய்­த­னர். விசா­ர­ணை­யில், இரு­வ­ரும் மனித வெடி­குண்­டு­க­ளாக மாறி, அம்­மா­நி­லத்­தில் பெரும் உயி­ரு­டற் சேதங்­களை ஏற்­ப­டுத்த சதித்­திட்­டம் தீட்­டி­யி­ருந்­தது தெரிய வந்­தது.

இந்த இரு­வ­ரு­டன் தொடர்­பு­டைய மேலும் பல­ருக்கு போலி­சார் வலை­வீசி இருந்­த­னர்.

இந்நிலையில், லக்­னோ­வில் நேற்று முன்­தி­னம் மேற்­கொண்ட மற்­றொரு நட­வ­டிக்­கை­யின் போது மேலும் மூன்று பயங்­க­ர­வா­தி­கள் பிடி­பட்­டுள்­ள­னர்.

இவர்­கள் அல் காய்தா ஆத­ர­வு­டன் இயங்­கும் ஓர் அமைப்­பைச் சேர்ந்­த­வர்­கள் என்­ப­தும், உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தி்ல பல்­வேறு குண்­டு­வெ­டிப்­புச் சம்­ப­வங்­களை நிகழ்த்த திட்­ட­மிட்­டி­ருந்­த­தும் தெரிய வந்­துள்­ளது.

இதை­ய­டுத்து, மாநி­லம் முழு­வ­தும் போலி­சார் தீவிர கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்­டுள்­ள­னர்.