ரூ.60 கோடி லஞ்சம்: எடியூரப்பா, மகன் உள்பட 6 பேர் மீது புகார்

ரூ.60 கோடி லஞ்சம்: எடியூரப்பா, மகன் உள்பட 6 பேர் மீது புகார்

1 mins read
85f49c49-8a84-4b28-a4c5-619703390d7c
-

பெங்­க­ளூரு: பெங்­க­ளூ­ரு­வில் வசித்து வரும் சமூக ஆர்­வ­ல­ரான ஆபி­ர­காம் என்­ப­வர் ஊழல் தடுப்பு படை­யில் ஒரு புகார் அளித்து உள்­ளார். அந்த புகா­ரில் கூறப்­பட்டு இருந்­த­தா­வது:-

கர்­நா­டக மாசு கட்­டுப்­பாட்டு வாரி­யத்­தின் முன்­னாள் தலை­வ­ராக இருந்த சுதீந்­திரா ராவ், தன்னை அந்த பணிக்கு நிய­ம­னம் செய்ய ரூ.9¾ கோடி லஞ்­சம் கொடுத்­த­தாக கன்­னட தொலைக்­காட்சி சேன­லுக்கு பேட்டி கொடுத்து உள்­ளார்.

இது­த­விர கர்­நா­டக மாசு கட்­டுப்­பாட்டு வாரி­யம் சார்­பில் மேற்­கொள்­ளப்­படும் பணி­கள், ஊழி­யர்­கள் நிய­ம­னம் உள்­ளிட்ட பல பணி­க­ளுக்கு ரூ.60 கோடி வரை லஞ்­சம் வாங்­கப்­பட்டு உள்­ளது.

இதில் முதல் அமைச்­சர் எடி­யூ­ரப்பா, பெங்­க­ளூரு நகர மாவட்ட பஞ்­சா­யத்து உறுப்­பி­ன­ரும், எடி­யூ­ரப்­பா­வின் உற­வி­ன­ரு­மான மரி­ய­சாமி, எடி­யூ­ரப்­பா­வின் மக­னும், கர்­நா­டக பாரதிய ஜனதா கட்சித் துணைத் தலை­வ­ரு­மான விஜ­யேந்­திரா, எடி­யூ­ரப்­பா­வின் பேரன் சசி­தர் மரடி, எடி­யூ­ரப்­பா­வின் மரு­ம­கன் சஞ்­சய்ஸ்ரீ, மகள் பத்­மா­வதி விரு­பாக்­சப்பா ஆகி­யோ­ருக்­கும் தொடர்பு உள்­ளது. லஞ்­சம் கொடுத்­தார் என்­ப­தற்­காக, எந்­தத் தகு­தி­யும் இல்­லாத சுதீந்­திரா ராவை, எடி­யூ­ரப்பா கர்­நா­டக மாசு கட்­டுப்­பாட்டு வாரிய தலை­வ­ராக நிய­மித்து உள்­ளார். இவர்­கள் 6 பேர் மீதும் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்று அந்த புகா­ரில் கூறப்­பட்டு இருந்­தது.