கிணற்றில் விழுந்த சிறுவனைக் காப்பாற்றச் சென்றவர்கள் கிணற்றுக்குள் விழுந்த பரிதாபம்

கிணற்றில் விழுந்த சிறுவனைக் காப்பாற்றச் சென்றவர்கள் கிணற்றுக்குள் விழுந்த பரிதாபம்

1 mins read
7dcb4d86-c94d-4825-ac8d-5d0bddcc8944
-

போபால்: கிணற்றுக்குள் விழுந்த சிறுவனைக் காப்பாற்ற திரண்ட ஏராளமானோர் ஒட்டுமொத்தமாக கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

கஞ்ச்­ப­சோதா என்ற கிரா­மத்­தில், பாழ­டைந்த கிணற்றில் விழுந்த ஒரு சிறு­வ­னைக் காப்­பாற்ற கிணற்­றின் அருகே திரண்டு வந்து கிணற்றை எட்­டிப்­பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­போது, அதன் சுற்­றுச்­சு­வர் இடிந்து அங்­கி­ருந்­த­வர்­களில் 20க்கு மேற்­பட்­டோர் கிணற்­றுக்­குள் விழுந்து விட்­ட­னர். இத­னால் அப்­ப­கு­தி­யில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

உட­ன­டி­யாக மாநில மற்­றும் தேசிய பேரி­டர் மீட்­புக் குழு­வி­ன­ருக்கு தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. மீட்­புக்­கு­ழு­வி­னர் சம்­பவ இடத்­திற்கு வந்­த­தும் மீட்­புப் பணி­கள் முடுக்கி விடப்­பட்­டன.

கிணற்­றில் இருந்து காய­ம் அடைந்த நிலை­யில் நேற்று மாலை 5 மணி நில­வ­ரப்­படி 14 பேர் மீட்­கப்­பட்டனர் என்றும் 4 பேர் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த­தா­கவும் கூறப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் இரவு 7.30 மணிக்கு நிகழ்ந்­த­தாக இந்­திய ஊட­கங்­கள் தெரி­வித்­தன. மருத்­து­வக் கல்­வித்­து­றைக்­கான அமைச்­ச­ர் விஷ்­வாஸ் சாராங் சம்­பவ இடத்­திற்கு நேரில் சென்று மீட்­புப்­ப­ணி­யைப் பார்­வை­யிட்­டார்.