எடியூரப்பா: மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி

எடியூரப்பா: மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி

2 mins read
07ecc5f2-8a38-4812-aff2-08df992708ac
-

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவோம்: வரிந்து கட்டும் ஆந்திர அரசு

மும்பை: காவி­ரி­யின் குறுக்கே மேக­தாது பகு­தி­யில் அணை கட்­டு­வது உறுதி என கர்­நா­டக முதல்­வர் எடி­யூ­ரப்பா திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.

டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், அணை கட்­டும் திட்­டத்­தால் தமி­ழ­கத்­துக்கு எந்­த­வித பாதிப்­பும் ஏற்­ப­டாது என்­றார்.

இது­கு­றித்து தமி­ழக முதல்­வ­ருக்கு தாம் கடி­தம் எழுதி இருப்­ப­தாக குறிப்­பிட்ட அவர், தமி­ழ­கம் மேக­தாது திட்­டத்தை எதிர்ப்­ப­தில்­தான் பிடி­வா­த­மாக உள்­ளது என்­றார்.

"மேக­தா­து­வில் அணை கட்ட சட்­டத்­தில் சாத­க­மான அம்­சங்­கள் உள்­ளன. இத்­திட்­டத்­தைச் செயல்­ப­டுத்த நாங்­கள் சக்­தியை மீறி முயற்சி செய்­கி­றோம்.

"அத­னால் மேக­தா­து­வில் அணை கட்­டு­வது நூறு விழுக்­காடு உறுதி. கர்­நா­டக மக்­க­ளுக்கு இந்த உறு­தி­மொ­ழியை அளிக்­கி­றேன்," என்று எடி­யூ­ரப்பா திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­தார்.

தமி­ழ­கத்­தில் இருந்து அனைத்­துக்­கட்­சிக் குழு அண்­மை­யில் டெல்லி சென்று மத்­திய ஜல்­சக்தி துறை அமைச்­சர் கஜேந்­தி­ர­சிங் ஷெகா­வத்தை நேரில் சந்­தித்­துப் பேசி­யது. அப்­போது மேக­தாது திட்­டத்­துக்கு மத்­திய அரசு ஒப்புதல் வழங்­கக் கூடாது என்று கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், டெல்­லி­யில் பிர­த­மர் மோடி­யைச் சந்­தித்­துப் பேசி­னார் முதல்­வர் எடி­யூ­ரப்பா. அதன் பின்­னர் அணை கட்­டு­வது உறுதி என்­றும் அறி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், மேக­தா­து­வில் அணை கட்­டு­வ­தற்­கான நடை­மு­றை­களை கர்­நா­டக அரசு முழு­மை­யாக செயல்­ப­டுத்­த­வில்லை என்­றும் இதன் கார­ண­மாக அணை கட்ட அனு­மதி வழங்­கப்­ப­டாது என்­றும் மத்­திய அமைச்­சர் கஜேந்­தி­ர­சிங் ஷெகா­வத் தமி­ழக குழு­வி­டம் தெரி­வித்­த­தாக தமி­ழக நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் துரை­மு­ரு­கன் கூறி­னார்.

இவ்­வாறு தமி­ழ­கத்­துக்­கும் கர்­நா­ட­கா­வுக்­கும் இடையே மோதல் நிலவி வரும் நிலை­யில், தமி­ழக - ஆந்­திர எல்­லை­யில் பாலாற்­றின் குறுக்கே அணை கட்ட வேண்­டும் என ஒய்­எஸ்­ஆர் காங்­கி­ரஸ் கட்சி வலி­யு­றுத்தி உள்­ளது.

அம்­மா­நில முதல்­வர் ஜெகன்­மோகன் ரெட்டி தலை­வ­ராக உள்ள கட்சி இவ்­வாறு கூறி­யி­ருப்­பது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

பாலாற்­றின் குறுக்கே ஆந்­திர அரசு கடந்த 2003ஆம் ஆண்டு 0.6 டிஎம்சி கொள்­ள­ளவு கொண்ட அணை கட்ட குப்­பம் அருகே கணே­ச­பு­ரம் பகு­தி­யில் இடம் தேர்வு செய்­தது. ஆனால் தமி­ழ­கம் சார்­பில் உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுக்­கப்­பட்­ட­தால் அணை கட்­டு­வது சாத்­தி­ய­மா­க­வில்லை. இரு அண்டை மாநிலங்களுடனும் தமிழகம் பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளது.