விரைவில் சிறார்களுக்கு தடுப்பூசி: அரசு தகவல்

விரைவில் சிறார்களுக்கு தடுப்பூசி: அரசு தகவல்

1 mins read
9d54c220-0305-4e83-8309-33ec9d3fe2ec
பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வு நேற்று பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. கோல்கத்தாவில் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு உடல் வெப்ப அளவு பரிசோதிக்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: சிறார்­க­ளுக்­கான கொரோனா தடுப்­பூசி மிக விரை­வில் பயன்­பாட்­டுக்கு வரும் என மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

அம்­ம­ருந்து குறித்த பரி­சோ­த­னை­கள் இறு­திக்­கட்­டத்­தில் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நாடு முழு­வ­தும் கொரோனா மூன்­றா­வது அலை ஏற்­ப­டக்­கூ­டும் என மருத்­துவ நிபு­ணர்­கள் தொடர்ந்து எச்­ச­ரித்து வரு­கின்­றன.

இரண்­டா­வது அலை­யைப் போல் பாதிப்­பு­கள் மோச­மாக இருக்­காது என்று கூறப்­படும் நிலை­யில், அடுத்த அலை­யில் சிறார்­கள் அதி­கம் பாதிக்­கப்­ப­ட­லாம் என்­றும் ஒரு­த­ரப்­பி­னர் கூறு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், டெல்லி உயர் நீதி­மன்­றத்­தில் தியா குப்தா என்ற 12 வயது சிறுமி ஒரு மனு­வைத் தாக்­கல் செய்­துள்­ளார்.

அதில், கிரு­மித்­தொற்­றால் சிறார்­கள் அதி­கம் பாதிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவர்­க­ளுக்கு தடுப்­பூசி போட விரைந்து நட­வ­டிக்கை எடுக்க உத்­த­ர­விட வேண்­டும் என கோரப்­பட்­டுள்­ளது.

அம்­ம­னுவை விசா­ரித்த உயர் நீதி­மன்ற அமர்வு, மத்­திய சுகா­தார அமைச்சு பதில் மனு தாக்­கல் செய்ய உத்­த­ர­விட்­டது. அதன்­படி, தாக்­கல் செய்­யப்­பட்ட பதில் மனு­வில், சிறார்­க­ளுக்­கான தடுப்­பூசி விரை­வில் பயன்­பாட்­டுக்கு வரும் என மத்திய சுகா­தார அமைச்சு கூறி­யுள்­ளது.

குஜ­ராத்­தைச் சேர்ந்த ஸைடஸ் கேடிலா என்ற நிறு­வ­னம், 12 முதல் 18 வய­துக்­குட்­பட்ட குழந்­தை­களுக்­கான தடுப்­பூ­சியை தற்­போது பரி­சோ­தித்து முடித்­துள்­ள­தா­க­வும் மிக விரை­வில் அத்­த­டுப்­பூ­சி­யைப் பயன்­படுத்த உரிய அனு­மதி கிடைக்­கும் என எதிர்­பார்ப்­ப­தா­க­வும் சுகா­தார அமைச்சு கூறி­யுள்­ளது.

அனு­மதி கிடைத்­த­வு­டன் மிக விரை­வில் அத்­த­டுப்­பூசி பயன்­பாட்­டுக்கு வரும் என எதிர்பார்ப்பதாக சுகா­தார அமைச்சு பதில் மனுவில் மேலும் கூறி­யுள்­ளது.