கேரளாவில் குறையாத கொரோனா, ஸிக்கா பாதிப்பு

கேரளாவில் குறையாத கொரோனா, ஸிக்கா பாதிப்பு

1 mins read
9e8ff9a5-346b-4bec-8866-4b003c01a50c
-

திரு­வ­னந்­த­புரம்: கேர­ளா­வில் ஸிக்கா கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 30ஆக அதி­க­ரித்­துள்­ளது. இதை­ய­டுத்து திரு­வ­னந்­த­பு­ரத்­தில் கிரு­மித்­தொற்­றைக் கண்­ட­றி­வ­தற்­கான பரி­சோ­த­னை­கள் அதிக அள­வில் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இதற்­கி­டையே, கொரோனா பாதிப்­பும் இம்­மா­நி­லத்­தில் அதி­க­ரித்­துள்­ளது. வெள்­ளிக்­கி­ழமை அங்கு புதி­தாக 13,750 பேருக்கு கொரோனா கிருமி தொற்­றி­யுள்­ளது. 130 பேர் பலி­யா­கி­விட்­ட­னர்.

கடந்த இரு வாரங்­க­ளாக அங்கு நாள்­தோ­றும் குறைந்­த­பட்­சம் நூறு கொரோனா இறப்­பு­கள் பதி­வா­கின்­றன. அரசு, தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளின் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை ஒரே அள­வில் நீடித்து வரு­கிறது. மாநி­லம் முழு­வ­தும் கடந்த இரு தினங்­களில் 300,750 மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­பட்­டுள்­ளன. எனி­னும், 250,000 என்ற இலக்கை எட்ட முடி­ய­வில்லை.

இதற்­கி­டையே, கேர­ளா­வில் இது­வரை 11.7 மில்­லி­யன் பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. இவர்­களில் சுமார் 4.4 மில்­லி­யன் பேர் இரு தவணை தடுப்­பூசி போட்­டுக் கொண்­டுள்­ள­னர். இந்­நி­லை­யில், மேலும் ஆறு மில்­லி­யன் தடுப்­பூ­சி­களை உட­ன­டி­யாக வழங்­கு­மாறு மத்­திய அர­சி­டம் கேரளா கோரி உள்­ளது.