கேரளாவில் மாவட்டந்தோறும் வரதட்சணை தடுப்பு அதிகாரிகள் நியமனம்

கேரளாவில் மாவட்டந்தோறும் வரதட்சணை தடுப்பு அதிகாரிகள் நியமனம்

2 mins read
e68f7077-3628-4878-858b-3604eee102e6
வீணா ஜார்ஜ். படம்: ஊடகம் -

திரு­வ­னந்­தபுரம்: கேர­ளா­வில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை வரதட்­ச­ணைக்­காக பெண்­கள் கொடு­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக 15,143 வழக்­கு­கள் பதி­வா­கி­ உள்­ளன.

மேலும், அங்கு கடந்த ஐந்து ஆண்­டு­களில் மட்­டும் வர­தட்­சணை விவ­கா­ரத்­தால் 66 பெண்­கள் உயிரை மாய்த்­துக்கொண்ட அதிர்ச்சித் தகவல் வெளி­யாகி உள்­ளது.

கேர­ளா­வில் வர­தட்­ச­ணைக் கொடுமை அதி­க­ரித்து வரு­வ­தா­கப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் கவலை தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

நாட்­டி­லேயே கல்­வி­ய­றிவு பெற்ற மாநி­லங்­க­ளின் பட்­டி­ய­லில் முத­லி­டத்தை தக்க வைத்து வரு­கிறது கேரளா.

அம்­மா­நி­லத்­தில் படித்த பெண்­களே தவ­றான முடி­வு­களை எடுப்­பது சமூக ஆர்­வ­லர்­கள் மத்­தி­யில் கவ­லையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

கேர­ளா­வில் பத்து திரு­ம­ணங்­கள் நடந்­தால் அதில் ஏழு, பெண்­கள் வர­தட்­சணை தொடர்­பான பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­வ­தாக காவல்­துறை புள்ளிவிவ­ரங்­கள் மூலம் தெரிய வரு­வ­தாக ஆனந்த விக­டன் ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

அதி­க­ரித்து வரும் புகார்­களை அடுத்து, மாநி­லத்­தின் அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் வர­தட்­சணை தடுப்பு அதி­கா­ரி­களை நிய­மித்­துள்­ள­தாக சுகா­தார, பெண்­கள், குழந்­தை­கள் நலத்­துறை அமைச்­சர் வீணா ஜார்ஜ் தெரி­வித்­துள்­ளார்.

மேலும் அம்­மா­நி­லத்­தில் அம­லில் உள்ள வர­தட்­சணை தடுப்­புச்­சட்டத்­தில் திருத்­தம் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதற்கு முன்பு திரு­வ­னந்­த­புரம், எர்­ணா­கு­ளம், கோழிக்­கோடு பகு­தி­களில் உள்ள வட்­டார அலு­வ­ல­கங்­களில் மட்­டுமே இத்­த­கைய அதி­கா­ரி­கள் இருந்­த­னர் என்று சுட்டிக்­காட்டி உள்ள அவர், இப்­போது 14 மாவட்­டங்­க­ளி­லும் தனித்­தனி அதி­கா­ரி­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

"பெண்­கள், குழந்­தை­கள் நலத்­துறை இயக்­கு­நர் வரதட்சணை தடுப்பு இயக்­கு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். வர­தட்­ச­ணைக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­காக இந்­தச் சட்­டத்­தி­ருத்­தம் கொண்­டு­வரப்­பட்­டுள்­ளது.

"மேலும், மாவட்ட ஆலோ­சனைக் குழுக்­களை உரு­வாக்­கும் நட­வடிக்­கை­கள் நடந்து வரு­கின்­றன. மக்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­த­வும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

"இதற்கு நல்ல பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்," என்று அமைச்­சர் வீணா ஜார்ஜ் மேலும் கூறி­யுள்­ளார்.