அதிகரித்த மக்கள் நடமாட்டம்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

அதிகரித்த மக்கள் நடமாட்டம்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

2 mins read
193cd34e-f0a0-48c2-8269-118db198c412
-

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் மக்­கள் நட­மாட்­டம் மீண்­டும் அதி­க­ரித்­துள்­ளது என்­றும் இதன் மூலம் தொற்­றுப் பர­வல் அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ள­தா­க­வும் மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அண்­மை­யில் சேக­ரிக்­கப்­பட்ட 'கூகல்' நிறு­வ­னத்­தின் தர­வு­க­ளைப் பார்க்­கும்­போது கவலை எழு­வ­தாக அந்த அமைச்சு கூறி­யுள்­ளது.

குறிப்­பிட்ட இடங்­கள் என்று இல்­லா­மல் சுற்­று­லாத் தலங்­கள், கடைத்­தெ­ருக்­கள், சந்­தை­கள் என அனைத்து இடங்­க­ளி­லும் மக்­கள் நட­மாட்­டம் வெகு­வாக அதி­க­ரித்­துள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்­டும் சுகா­தார அமைச்சு, நாட்­டில் உள்ள அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் இது­தான் நிலைமை எனக்­கூ­றி­யுள்­ளது.

"கொரோனா நெருக்­க­டிக்கு முன்பு இருந்த நிலைக்கு பல மாவட்­டங்­கள் திரும்பி உள்­ளன. சில மாவட்­டங்­களில் முன்பு காணப்­பட்­டதை விட அதி­க­மான மக்­கள் பொது இடங்­களில் கூடு­கின்­ற­னர்.

"இது நிச்­ச­யம் கவலை அளிக்­கக் கூடிய விஷ­யம்," என்று மத்­திய சுகா­தா­ரத்­துறை இணைச்­செ­ய­லா­ளர் லாவ் அகர்­வால் தெரி­வித்­துள்­ளார்.

எனவே ஊர­டங்கு தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்ள போதி­லும், மக்­கள் நட­மாட்­டத்­தைக் கட்­டுப்­ப­டுத்த மாநில அர­சு­கள் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என மத்­திய சுகா­தார அமைச்சு வலி­யு­றுத்தி உள்­ளது.

'கூகல்' தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில், சமூக நட­மாட்­டம் குறித்து ஆராய்ந்­த­போது, கடந்த மே 10ஆம் தேதி முதல் ஜூலை 10ஆம் தேதி வரை­யி­லான ஒரு மாத காலத்­தில் மட்­டும் மக்­கள் நட­மாட்­டம் ஒட்டு ­மொத்­தத்­தில் இரு மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது.

இரு மாதங்­க­ளுக்­குள் நாட்­டின் பெரும்­பா­லான மாவட்­டங்­களில் கொரோனா நெருக்­கடி தொடங்­கு­வ­தற்கு முன்பு இருந்த மக்­கள் நட­மாட்­டத்தை மீண்­டும் காண முடி­வ­தாக சுகா­தார அமைச்சு கூறு­கிறது.

சுற்­று­லாத் தலங்­களில் கூட்­டம் அதி­க­ரிப்­பது கவலை தரு­கிறது எனில், அத்­த­கைய இடங்­கள் இல்­லாத மாவட்­டங்­க­ளி­லும் கூட மக்­கள் நட­மாட்­டம் அதி­க­ரித்­துள்­ளது. மலைப்­ப­கு­தி­களில் வசிப்­ப­வர்­கள், அங்கு வருகை தரு­ப­வர்­கள் முகக்­க­வ­சம் அணி­யா­மல் நட­மா­டு­வதை பெரும் அபா­யம் என சுகா­தார அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

கேரளா, மகா­ராஷ்­டிரா, வட­கி­ழக்கு மாநி­லங்­களில் தொற்­றுப்­ப­ர­வல் இன்­னும் கட்­டுக்­குள் வர­வில்லை. நாடு மூன்­றா­வது கொரோனா அலையை எதிர்­நோக்கி உள்ள வேளை­யில், மக்­கள் தங்­கள் நட­மாட்­டத்­தைக் குறைத்­துக்­கொள்ள வேண்­டும் என அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

ஒரே மாதத்தில் இருமடங்கு அதிகரிப்பு: தொற்று அதிகரிக்க வாய்ப்பு