மும்பையில் மேலும் ஐந்து நாள்களுக்கு மழை நீடிக்கும்

1 mins read
4504bb1d-533a-44c6-9701-533c3a39f296
-

மும்பை: கடந்த இரு தினங்­களாக மும்பை மாந­கரை புரட்டிப் போட்­டுக்கொண்­டி­ருக்­கும் கன­மழை­யா­னது மேலும் ஐந்து நாள்­களுக்கு நீடிக்­கும் என இந்­திய வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

இதை­ய­டுத்து மும்­பைக்கு கன­ம­ழைக்­கான 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

வட மாநி­லங்­களில் பரு­வ­மழை தீவி­ர­ம­டைந்து வரு­கிறது. மகா­ராஷ்­டிரா, டெல்லி, இமாச்சலப் பிர­தே­ச மாநி­லங்­களில் அண்­மைய சில தினங்­க­ளாக பலத்த மழை நீடிக்­கிறது.

மும்­பை­யில் இரு தினங்­களுக்கு முன்பு நள்­ளி­ர­வில் பெய்த அடை­ம­ழை­யால் மொத்த நக­ர­மும் வெள்­ளக்­காடா­னது. சில பகு­தி­களில் மழைநீர் வீடு­க­ளுக்­குள் புகுந்­தது. இத­னால் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

பேருந்து, ரயில் போக்கு வரத்து நிலை­குத்­திப் போனது. பல சாலை­களில் மழை­நீர் தேங்கியுள்­ளது. இத­னால் ஏரா­ள­மான வாக­னங்­க­ளுக்குள் தண்­ணீர் புகுந்­த­தில் அவை பழு­த­டைந்து ஆங்காங்கே நின்­று­விட்­டன. மும்­பை­யில் கன­மழைக்கு தாக்­குப்­பி­டிக்க இய­லா­மல் சுவர் இடிந்து விழுந்த சம்­ப­வங்­களில் பலி­யா­னோர் எண்­ணிக்கை 29ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இதற்­கி­டையே தலை­நகர் டெல்­லி­யி­லும் கன­மழை வெளுத்­துக்கட்டுகிறது.

ராஜஸ்­தான், உத்­த­ரப் பிர­தே­சம், மத்­தி­யப் பிர­தே­சம் உள்­ளிட்ட வட­மா­நி­லங்­களில் மேலும் சில தினங்­க­ளுக்கு கன­மழை நீடிக்­கும் வாய்ப்­புள்­ள­தாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்­துள்­ளது.