125 நாட்களுக்குப் பிறகு தொற்றுப் பாதிப்பு குறைந்தது

125 நாட்களுக்குப் பிறகு தொற்றுப் பாதிப்பு குறைந்தது

2 mins read
f33072c2-50b3-4420-b637-173562eadc36
-

கல்விக்கூடங்களைத் திறக்க எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் பரிந்துரை

புது­டெல்லி: இந்­தி­யா­வில் தடுப்­பூ­சிப் பணி தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இது­வரை 41,18,46,401 தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ளன. அத­னை­ய­டுத்து அங்கு கொவிட்-19 தொற்­றின் இரண்­டா­வது அலை­யால் உச்­ச­ம­டைந்த தொற்­றுப் பாதிப்புகள், இப்­போது படிப்­ப­டி­யா­கக் குறை­யத் தொடங்­கி­யுள்­ளது.

கடந்த 125 நாட்­க­ளுக்­குப் பிறகு நேற்று, தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை கணி­ச­மா­கக் குறைந்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக சுகா­தா­ரத்­துறை அமைச்சு, நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில், கடந்த 24 மணி­நே­ரத்­தில் 30,093 பேர் தொற்று பாதிப்­புக்கு ஆளாகி உள்­ள­னர். இத­னு­டன் மொத்த தொற்று பாதிப்பு எண்­ணிக்கை 3,11,74,322 ஆகி­யுள்­ளது. தொற்று பாதிப்­பால் ஒரே­நாளில் மேலும் 374 பேர் உயி­ரி­ழந்தனர். இத­னால் மொத்த உயி­ரி­ழப்பு எண்­ணிக்கை 4,14,482 ஆக உயர்ந்து உள்­ளது.

கடந்த 24 மணி­நே­ரத்­தில் 45,254 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர். இத­னால் மொத்த குண­ம­டைந்­தோர் எண்­ணிக்கை 3,03,53,710 ஆக உயர்­வ­டைந்­துள்­ளது. இதன்­மூ­லம் குண­ம­டை­வோர் விகி­தம் 97.32 விழுக்­கா­டாக உள்­ளது.

இந்­தியா முழு­வ­தும் நேற்­றைய நில­வ­ரப்­படி 4,06,130 பேர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். 117 நாட்­களில் இந்த எண்­ணிக்கை மிகக் குறை­வா­கும்.

நாடு முழு­வ­தும், இது­வரை 3,03,53,710 பேர் கொவிட் தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்­துள்­ள­னர்.

குண­ம­டைந்­த­வர்­க­ளின் விழுக்­காடு 97.37% ஆக அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த 24 மணி நேரத்­தில் 45,254 கொரோனா நோயா­ளி­கள் குண­ம­டைந்­துள்­ள­னர். இது சிகிச்சை பெறும் மொத்த எண்­ணிக்­கை­யில் 1.30 விழுக்­கா­டா­கும்.

வாராந்­திர தொற்று உறுதி விகி­தம் 5 விழுக்­காட்­டிற்­கும் குறை­வாக சரிந்து 2.06% ஆக உள்­ளது.

தின­சரி தொற்று விகி­தம் தொடர்ந்து 29 நாட்­க­ளாக 3 விழுக்காட்டிற்கும் குறை­வாக 1.68%, ஆகப் பதி­வாகி உள்­ளது.

இந்­நி­லை­யில் தொற்று பர­வல் விகி­தம் 5 விழுக்­காட்­டிற்­கும் குறை­வாக உள்ள மாவட்­டங்­களில் சமூக இடை­வெளி, முகக்­க­வ­சம் ஆகிய பாது­காப்­புக் கட்­டுப்­பாட்­டு­டன் படிப்­படி­யாக பள்­ளி­க­ளைத் திறக்­க­லாம்.

இது­கு­றித்து மாணாக்­கர், பெற்­றோர் ஆகி­யோ­ரி­டம் அவர்­க­ளின் விருப்­பத்தை அறிந்து பள்­ளி­கள் முடி­வெடுக்க வேண்­டும் என டெல்லி எய்ம்ஸ் மருத்­து­வ­மனை இயக்­கு­நர் டாக்­டர் ரன்­தீப் குலே­ரியா தெரி­வித்­தார்.

இப்­போது இணை­யம் வழி பாடம் நடத்­தப்­ப­டு­கிறது. இந்­நி­லை­யில் வச­தி­யில்­லாத மாண­வர்­கள் பல­ருக்­கும் கணினி, இணைய வசதி கிடைக்­காத சூழல் உள்­ளது.

இது கல்­வி­யில் பாகு­பாட்டை ஏற்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது. மாண­வர்­கள் பள்­ளிக்­குச்­சென்று கல்வி பயில்­வ­தால் இந்­தப் பாகு­பாட்­டைப் போக்­க­லாம் என்று டாக்­டர் ரன்­தீப் கூறி­னார்.