ஆபாசப் படங்கள் தயாரித்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது

2 mins read
a4e4823b-6aca-4244-84cb-165dc607513d
-

மும்பை: ஆபா­சப் படங்­கள் தயா­ரித்து செயலி மூலம் விற்­பனை செய்­த­­தாக எழுந்த குற்­றச்­சாட்­டின்­பே­ரில் வர்த்­த­க­ரும் நடிகை ஷில்பா ஷெட்­டி­யின் கண­வருமான ராஜ் குந்த்ரா உள்­ளிட்ட 11 பேரை மும்பை போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

ஆபா­சப் படங்­க­ளைத் தயா­ரித்து செய­லி­கள் வெளி­யிட்­ட­தில் ராஜ் குந்த்ரா முக்­கி­யக் குற்­ற­வாளி­ எனத் தெரியவந்துள்ளது.

கடந்த பிப்­ர­வரி மாதம் ஒரு பெண் மும்பை காவல் ஆணை­யர் அலு­வ­ல­கத்தை அணுகி, ராஜ்­குந்த்ரா மீது புகார் அளித்­தார்.

அந்­தப் புகா­ரில், இணை­யத் தொடர் தயா­ரிக்­கப் போவ­தா­கக் கூறி ஏரா­ள­மான பெண்­களை நடிக்க அழைத்து, அவர்­க­ளைப் படிப்­ப­டி­யாக பாலி­யல் படங்­களில் நடிக்க ராஜ் குந்த்ரா கட்­டா­யப்­படுத்­தி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

இந்தப் புகாரை அடுத்து, அண்­மை­யில் மும்­பை­யின் மேற்­குப் பகு­தி­யில் உள்ள மாலத், மாத் பகு­தி­யில் ஒரு பண்ணை வீட்­டில் பாலி­யல் படங்­கள் எடுக்­கப்­ப­டு­வ­தாக வந்த புகா­ரை­ய­டுத்து, அங்கு அதி­ர­டிச் சோதனை நடத்­திய போலி­சார், இயக்­கு­நர் ரோவா கான், புகைப்­ப­டக்­க­லை­ஞர் மோனு சர்மா, இயக்­கு­நர் பிர­திபா நலா­வாடே, இரு நடி­கர்­கள் என ஐந்து பேரைக் கைது செய்­த­னர்.

பின்­னர் அவர்­கள் கொடுத்த வாக்­கு­மூ­லத்­தை­ய­டுத்து ராஜ் குந்த்ரா முக்­கிய குற்­ற­வா­ளி­யாக கைது செய்­யப்­பட்­ட­தாக போலி­சார் தெரி­வித்­த­னர்.

ராஜ் குந்த்ரா மீது தக­வல் தொழில்­நுட்­பச் சட்­டம், பெண்­களை தவ­றா­கச் சித்­தி­ரித்­தல் உள்­ளிட்ட பல்­வேறு பிரி­வு­க­ளின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இத்­த­க­வலை மும்பை காவல் ஆணை­யர் ஹேமந்த் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா தம்­ப­தி­கள் 2009ஆம் ஆண்டு திரு­ம­ணம் செய்து கொண்­டார்­கள். இவர்­க­ளுக்கு வையான் ராஜ் என்ற மக­னும், ஷமிஷா என்ற மகளும் உள்­ளனர்.