ஆளில்லா வானூர்தி மூலம் தாக்க சதி: முழு விழிப்பு நிலையில் போலிஸ் துறை

புது­டெல்லி: இந்­தியா ஆகஸ்டு 15ஆம் தேதி தனது சுதந்­திர தினத்­தைக் கொண்­டா­டு­கிறது.

அதனை முன்­னிட்டு அதற்­கான பணி­களில் அரசு ஈடு­பட்டு வரு­கிறது. பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை­யும் பலப்­ப­டுத்தி வரு­கிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்­மீ­ருக்­கான சிறப்பு அந்­தஸ்து வழங்­கும் சட்­டப் பிரிவு ரத்து செய்­யப்­பட்­டது.

அந்த நாளில் டெல்­லி­யில் பயங்­க­ர­வா­தி­கள் ஆளில்லா வானூர்தி வழி தாக்­கு­தல் நடத்த வாய்ப்­பி­ருப்­ப­தாக உள­வுத் துறைக்­குத் தக­வல் கிடைத்து உள்­ளது.

அதனை அடுத்து புது­டெல்லி உள்­ளிட்ட பல இடங்­க­ளி­லும் போலிஸ் துறை விழிப்பு நிலை­யில் வைக்­கப்­பட்டு உள்­ளது.

இந்­நி­லை­யில், நேற்று முதல் ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்­திர தினக் கொண்­டாட்­டம் முடி­வ­டை­யும் வரை டெல்லி செங்­கோட்டைக்குள் நுழைய தடை விதிக்­கப்­ப­டு­கிறது என்று தொல்­லி­யல் துறை வெளி­யிட்டு உள்ள செய்தி தெரி­வித்­தது.

காஷ்­மீர் மாநி­லம் ஜம்மு விமான படைத்­த­ளத்­தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி இரண்டு ஆளில்லா வானூர்­தி­கள் பறந்து வந்து தாக்கு­தல் நடத்­தின. அவற்­றில் சிறிய வகை ஆர்டிஎக்ஸ் வெடி­குண்­டு­களை பொருத்தி இருந்­த­னர். அது கீழே விழுந்து வெடித்­தது. இரண்டு பேர் காயம் அடைந்­த­னர்.

ராணுவ மையத்­தில் ஆளில்லா வானூர்­தி­கள் மூலம் தாக்­கு­தல் நடத்­தி­யது அது­தான் முதல் தடவை ஆகும். பாகிஸ்­தானை சேர்ந்த பயங்­க­ர­வா­தி­கள் அந்த ஆளில்லா வானூர்­தி­களை இயக்கி தாக்­கு­தல் நடத்­தி­ய­தாக இந்­தி­யத் தரப்­பில் தெரி­விக்­கப்பட்டது.

இந்த தாக்­கு­த­லுக்குப் பிறகு பல தடவை காஷ்­மீர் பகு­தி­களில் மர்­ம­மான முறை­யில் ஆளில்லா வானூர்­தி­கள் பறந்­துள்­ளன.

இத­னால் இத்­த­கைய வானூர்தி ­க­ளைப் பயன்­ப­டுத்தி பயங்­க­ர­வாதி­கள் மேலும் தாக்­கு­தல் நடத்­தக்­கூ­டும் என்று கருதி முன் எச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்த நிலையில் டெல்லியில் வானூர்தி மூலம் தாக்குதல் நடத்து வதற்குத் திட்டம் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!