ஒட்டுக்கேட்பு: நாடாளுமன்றக் குழு 28ஆம் தேதி விசாரணை; எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு

ஒட்டுக்கேட்பு: நாடாளுமன்றக் குழு 28ஆம் தேதி விசாரணை; எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு

2 mins read
de1f631a-ab6a-4e08-9e5c-9325a8a0074a
-

கோல்­கத்தா: கைபேசி ஒட்­டுக்­கேட்பு விவ­கா­ரம் தொடர்­பாக நாடா­ளு­மன்றத் தக­வல், தொழில்­நுட்ப நிலைக்­குழு வரும் 28ஆம் தேதி விசா­ரணை நடத்த உள்­ளது.

இதை­ய­டுத்து மத்­திய உள்துறை, தக­வல் தொழில்­நுட்­பத்­துறை அதி­கா­ரி­க­ளுக்கு அழைப்­பாணை அனுப்­பப்­பட்­டுள்­ளது.

குடி­மக்­க­ளின் தக­வல் பாது­காப்பு, தனி­யு­ரிமை குறித்து நிலைக்­குழு கூட்­டத்­தில் ஆலோ­சிக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­­ளது. நாட்­டின் பாது­காப்­பு­டன் தொடர்­புள்ள பிரச்­சினை என்­ப­தால் மத்­திய அரசு உரிய பதில் அளிக்க வேண்­டி­யது அவ­சி­யம் என இக்­கு­ழு­வின் தலை­வ­ரான காங்­கி­ரஸ் எம்பி சசிதரூர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

இதற்­கி­டையே ஒட்­டுக்­கேட்பு விவ­கா­ரம் தொடர்­பாக அனைத்து எதிர்க்­கட்­சி­களும் மத்­திய பாஜக அர­சுக்கு எதி­ராக அணி­தி­ரள வேண்­டும் என மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வ­ரு­மான அவர், தம்­மால் எதிர்க்­கட்­சித் தலை­வர்­க­ளு­டன் பேச முடி­ய­வில்லை என்­றும் தமது தொலை­பே­சி­யும் ஒட்­டுக் கேட்­கப்­படு­கிறது என்­றும் கூறி­யுள்­ளார்.

இந்த விவ­கா­ரத்­தில் உச்ச நீதி­மன்­றம் தானாக முன்­வந்து விசா­ரணை செய்ய வேண்­டும் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், நாட்­டை­யும் ஜன­நா­ய­கத்­தை­யும் உச்ச நீதி­மன்­றம்­தான் காப்­பாற்ற வேண்­டும் என்­றார்.

"ஒரு குழு அமைத்து இவ்­வி­வ­கா­ரத்­தில் ஆழ்ந்த விசா­ரணை மேற்­கொள்ள உத்­த­ர­விட வேண்­டும். இந்த நாட்டை நீதித்­துறை மட்­டுமே காப்­பாற்ற முடி­யும்.

"பிர­த­மர் மோடி, இதை தனிப்­பட்ட தாக்­கு­த­லாக எடுத்­துக் கொண்­டா­லும் எனக்­குக் கவ­லை­யில்லை. நீங்­களும் (மோடி), உள்­துறை அமைச்­ச­ரும் சேர்ந்து எதிர்க்­கட்­சித் தலை­வர்­களை உளவு பார்க்க நாட்­டின் அமைப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­து­கி­றீர்­கள். மக்­க­ளின் வரிப்­ப­ணத்தை நீங்­கள் உளவு மென்­பொ­ருள் வாங்க செலவு செய்து கொண்­டி­ருக்­கி­றீர்­கள்," என்று முதல்­வர் மம்தா கூறி­ய­தாக தினத்­தந்தி ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.