ஆபாசக் காணொளி: சிக்கலில் ராஜ் குந்த்ரா

ஆபாசக் காணொளி: சிக்கலில் ராஜ் குந்த்ரா

1 mins read
8263b357-d07c-4182-b2ee-8504f43250cf
-

மும்பை: பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா மீது காவல்துறையின் பிடி இறுகி வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை நிறு­வ­னத்­து­டன் செய்துகொண்ட ஒப்­பந்­தத்­தின் அடிப்­ப­டை­யில் அவர் ஏரா­ள­மான ஆபாசக் காணொ­ளி­களைத் தயா­ரித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத­னால் பாதிக்­கப்­பட்ட பல பெண்­கள் அளித்த புகா­ரின் பேரில் மும்பை போலி­சார் அவ­ரைக் கைது செய்­துள்­ள­னர்.

லண்­ட­னைச் சேர்ந்த ஒரு நிறு­வனம் ஆபாசக் காணொ­ளி­களை விநி­யோ­கிப்­ப­தற்கு என்றே தனி செயலி ஒன்றை உரு­வாக்கி உள்­ளது. அச்செய­லியை இணை­யம் வழி பதி­வி­றக்­கம் செய்­ப­வர்­கள் குறிப்­பிட்ட கட்­ட­ணத்­தைச் செலுத்­தி­னால், ஆபாசக் காணொ­ளி­களைப் பார்க்க முடி­யும்.

இத்­த­கைய செய­லி­க­ளுக்கு இந்­தி­யா­வில் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. என­வே­தான் தமது உற­வி­னர் ஒரு­வ­ரது பெய­ரில் லண்­டன் நிறு­வ­னத்தை ராஜ் குந்த்­ராவே நடத்தி வந்­த­தாக காவல்­துறை தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.

மேலும், லண்­டன் நிறு­வ­னத்­து­ட­னான ஒப்­பந்­தப்­படி மும்பை உட்­பட இந்­தி­யா­வின் பல்­வேறு பகு­தி­களில் ஆபாசக் காணொளி­க­ளைப் பட­மாக்கி விற்­றுள்­ளார்.

இந்­நி­லை­யில், சினிமா வாய்ப்பு தரு­வ­தா­கக் கூறி தங்­களை ஏமாற்றி ஆபா­சப் படங்­களில் நடிக்க வைத்­த­தாக மும்­பை­ பெண்­கள் சிலர் போலிசில் அளித்த புகாரின் பேரில் ராஜ் குந்த்ரா உள்­ளிட்ட 11 பேர் கைதாகி உள்­ள­னர்.