கேரளா, மகாராஷ்டிராவில் குறையாத தொற்று

கேரளா, மகாராஷ்டிராவில் குறையாத தொற்று

1 mins read
863adfaa-cd53-4c7f-9cb0-392efa3a3c2a
-

புது­டெல்லி: பல வாரங்­க­ளாக நீடிக்­கும் ஊர­டங்கு, கடும் கட்­டுப்­பாடு­கள் ஆகி­ய­வற்­றுக்கு மத்­தி­யி­லும் கேர­ளா­வில் கொரோனா தொற்று எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது.

நேற்று முன்­தி­னம் அங்கு புதி­தாக 17,481 பேருக்கு கொரோனா கிருமி தொற்­றி­யது; மேலும் 105 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். பலி­யா­னோர் மொத்த எண்­ணிக்கை 15,617 ஆக உயர்ந்­துள்­ளது.

இதற்­கி­டையே மகா­ராஷ்­டி­ரா­வில் மேலும் 8,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. ஒரே­நா­ளில் மேலும் 165 பேர் மர­ண­ம­டைந்­த­னர். உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 130,918 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

நாடு முழு­வ­தும் நேற்று முன்­தி­னம் 41,383 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யுள்­ளது. 507 பேர் பலி­யாகி உள்­ளனர். புதிய தொற்று பாதிப்புகளில் கிட்டத்தட்ட 60 விழுக்­காடு கேர­ளா­வி­லும் மகா­ராஷ்­டி­ரா­வி­லும்­தான் பதி­வா­கி வருவதை நிபு­ணர்­கள் சுட்­டிக்­காட்டி உள்­ள­னர்.