சட்டவிரோத துப்பாக்கி உரிம விற்பனை; 40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

சட்டவிரோத துப்பாக்கி உரிம விற்பனை; 40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

1 mins read
02d7473a-7fa5-416d-bbf9-cd1410220bef
-

ஸ்ரீந­கர்: துப்­பாக்கி வைத்­தி­ருப்­ப­தற்­கான உரி­மங்­க­ளைக் கள்­ளத்­த­ன­மாக விற்­றது தொடர்­பில், மூத்த ஐஏ­எஸ் அதி­காரி ஷாகித் இக்­பால் சௌத்­ரி­யின் வீடு உட்­பட ஜம்மு-காஷ்­மீ­ரி­லும் டெல்­லி­யி­லும் 40 இடங்­களில் இந்­தி­யப் புல­னாய்­வுப் பிரிவு (சிபிஐ) நேற்று அதி­ர­டிச் சோத­னை­களை நடத்­தி­யது.

இப்­போது ஜம்மு-காஷ்­மீர் பழங்­கு­டி­யி­னர் விவ­கா­ரத் துறைச் செய­லா­ள­ராக இருந்து வருகிறார் திரு சௌத்ரி. அவர் கத்­துவா, ரியாசி, ரஜோரி, உதம்­பூர் ஆகிய மாவட்­டங்­களில் உதவி ஆணை­ய­ரா­கப் பணி­யாற்­றி­ய­போது, போலிப் பெயர்­களில் ஆயி­ரக்­க­ணக்­கில் துப்­பாக்கி உரி­மங்­களை விற்­ற­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

இந்த விவ­கா­ரம் தொடர்­பில் குறைந்­தது எட்டு முன்­னாள் உதவி ஆணை­யர்­க­ளி­டம் சிபிஐ விசா­ரணை நடத்தி வரு­கிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஜம்மு-காஷ்­மீ­ரில் மட்­டும் இரு­நூறா­யி­ரத்­திற்­கும் மேற்­பட்ட துப்­பாக்கி உரி­மங்­கள் கள்­ளத்­த­ன­மாக விற்­கப்­பட்­டுள்­ளன. இதுவே, இந்­தி­யா­வின் ஆகப் பெரிய துப்­பாக்கி உரிம மோச­டிக் கும்­ப­லாக நம்­பப்­ப­டு­கிறது.

இதே கார­ணத்­திற்­காக, கடந்த ஆண்­டி­லும் ஐஏ­எஸ் அதி­காரி ராஜீவ் ரஞ்­சன், ஹுசேன் ரஃபிக்கி ஆகிய இரு­வரை சிபிஐ கைது செய்­தது. குப்­வாரா மாவட்­டத்­தில் உதவி ஆணை­யர்­க­ளா­கப் பணி­பு­ரிந்­த­போது அவ்­வி­ரு­வ­ரும் கள்­ளத்­த­ன­மாக துப்­பாக்கி உரி­மங்­களை விற்­ற­தா­கக் கூறப்­பட்­டது.

கடந்த 2017ஆம் ஆண்டு ராஜஸ்­தான் பயங்­க­ர­வா­தத் தடுப்­புப் படை­யி­னர், இந்த மோச­டி­யைக் கண்­டு­பி­டித்­த­னர். அப்­போது, ராஜீவ் ரஞ்­ச­னின் சகோ­த­ரனும் இடைத் தர­கர்­க­ளா­கச் செயல்­பட்ட பல­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர். பின்­னர் அரசு அதி­கா­ரி­களுக்­கும் இதில் தொடர்பிருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து, வழக்கு சிபிஐவசம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.