திருவனந்தபுரம்: கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையாத நிலையில், கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அங்கு கோழிகள் திடீரென கொத்துக் கொத்தாக இறந்து போவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே கொரோனா பிடியில் சிக்கியுள்ள கேரளாவில் 'ஸிக்கா' பாதிப்பும் உள்ளது. இப்போது பறவைக் காய்ச்சல் பரவுவதாக செய்தி வெளியாகி உள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் முந்நூறுக்கும் மேற்பட்ட கோழிகள் திடீரென கொத்து கொத்தாக இறந்துள்ளன. அவற்றின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டபோது, அவை பறவைக் காய்ச்சல் பாதிப்பால் இறந்தது தெரியவந்தது.
இதற்கிடையே, கேரளாவில் நேற்று முன்தினம் மீண்டும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐம்பது நாள்களில் இல்லாத வகையில் சனிக்கிழமை புதிய தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 18,531ஆக பதிவாகி உள்ளது. மேலும் 98 பேர் பலியாகிவிட்டனர்.