வடமாநிலங்களில் பருவ மழை தீவிரம்

வடமாநிலங்களில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. மகாராஷ்டிரா, இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அண்மைய சில தினங்களாக கனமழை நீடித்து வருகிறது. மழை காரணமாக மின்னல் தாக்கி, நிலச்சரிவு, வீட்டுச் சுவர்கள் இடிந்து விழுவது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பலத்த மழை பெய்தததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியதை அடுத்து, வாகனமோட்டிகள் நேற்று கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதற்கிடையே, பருவமழை மேலும் தீவிரம் அடையும் என்றும் அடுத்த சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டிலும் மும்பை மாநகரம் பருவ மழையால் தத்தளிக்கிறது. அங்கு மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துவிட்டனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!