வடமாநிலங்களில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. மகாராஷ்டிரா, இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அண்மைய சில தினங்களாக கனமழை நீடித்து வருகிறது. மழை காரணமாக மின்னல் தாக்கி, நிலச்சரிவு, வீட்டுச் சுவர்கள் இடிந்து விழுவது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பலத்த மழை பெய்தததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியதை அடுத்து, வாகனமோட்டிகள் நேற்று கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதற்கிடையே, பருவமழை மேலும் தீவிரம் அடையும் என்றும் அடுத்த சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டிலும் மும்பை மாநகரம் பருவ மழையால் தத்தளிக்கிறது. அங்கு மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துவிட்டனர். படம்: ஏஎஃப்பி
வடமாநிலங்களில் பருவ மழை தீவிரம்
26 Jul 2021 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!