சவக்கிடங்கு உதவியாளர் பணிக்கு 2,700 பட்டதாரிகள் விண்ணப்பம்

சவக்கிடங்கு உதவியாளர் பணிக்கு 2,700 பட்டதாரிகள் விண்ணப்பம்

1 mins read
6b3506d4-5c65-446b-b856-bcb3f6526bcb
-

கோல்­கத்தா: சவக்கிடங்கு உத­வி­யா­ளர் பணிக்கு நூற்­றுக்­கும் மேற்­பட்ட பொறி­யா­ளர்­கள் விண்­ணப்­பித்­துள்­ள­னர்.

மேலும், 2,700க்கும் மேற்­பட்ட பட்­ட­தா­ரி­கள் இந்த வேலை­யில் சேர விருப்­பம் தெரி­வித்­துள்­ள­தாக மேற்கு வங்க ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

கோல்­கத்­தா­வில் உள்ள அரசு மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­மனை­யின் சவக்கிடங்கு தட­ய­வி­யல் பரி­சோ­த­னைக் கூடத்­தில் ஆறு உத­வி­யா­ளர் பணி­யி­டங்­கள் காலி­யாக உள்­ளன. இப்­ப­ணி­யில் சேர எட்­டாம் வகுப்பு முடித்­த­வர்­க­ளி­டம் இருந்து விண்­ணப்­பங்­கள் கோரப்­பட்­டி­ருந்­தன. இதை­ய­டுத்து எட்­டா­யி­ரம் பேர் விண்­ணப்­பங்­களை அனுப்பி இருந்­த­னர். இவர்­களில் 2,200 பேர் இள­நி­லைப் பட்­டப்­ப­டிப்பை முடித்­த­வர்­கள். 500 பேர் முது­நி­லைப் பட்­ட­தா­ரி­கள் ஆவர்.

சட­லங்­க­ளைக் கையா­ளும் பணிக்கு பட்­ட­தா­ரி­கள், உயர்­கல்­வித் தகுதி படைத்­த­வர்­கள் விண்­ணப்­பித்­தி­ருப்­பது மேற்கு வங்க சுகா­தார அதி­கா­ரி­க­ளுக்கு அதிர்ச்சி அளித்­துள்­ளது. இதன் மூலம், வேலை­யில்­லாத் திண்­டாட்­டத்­தின் உண்மை நிலை தெரிய வரு­வ­தாக சமூக ஆர்­வ­லர்­கள் கூறு­கின்­ற­னர்.