பதவி விலகினார் எடியூரப்பா: புதிய முதல்வர் விரைவில் தேர்வு

பதவி விலகினார் எடியூரப்பா: புதிய முதல்வர் விரைவில் தேர்வு

2 mins read
fbcd4786-b013-4e21-9d31-075f9eeb3413
-

பெங்­க­ளூரு: கர்­நா­டக முதல்­வர் பத­வி­யில் இருந்து வில­கு­வ­தாக எடி­யூ­ரப்பா (படம்) அறி­வித்­துள்­ளார். நேற்று கர்­நா­டக மாநில பாஜக எம்­எல்­ஏக்­கள் கூட்­டம் முடிந்த பிறகு செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசி­ய­போது அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி முதல்­வராகப் பத­வி­யேற்ற அவர், சரி­யாக இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு பதவி விலகி உள்­ளார்.

கர்­நா­டக மாநில பாஜ­க­வில் கடந்த சில மாதங்­க­ளாக உட்­கட்­சிப் பூசல் நிலவி வரு­கிறது. முதல்­வர் எடி­யூ­ரப்­பா­வுக்கு எதி­ராக சிலர் அணி­வ­குத்­த­னர். மேலும், அவ­ரது அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்­றுள்ள சில­ரும் கூட அவ­ருக்கு எதிர்ப்பு தெரி­வித்­த­னர்.

இதை­ய­டுத்து கட்­சித் தலைமை அவரை பதவி விலக உத்­த­ர­விட்ட­தாக தக­வல் வெளி­யா­னது. ஆனால் தமது செயல்­பாட்டில் கட்சித் தலை­மைக்கு முழு திருப்தி இருப்­ப­தால் தாம் பதவி விலக வேண்­டிய அவ­சி­யம் எழ­வில்லை என்­றும் அதே­ச­ம­யம் கட்­சித் தலைமை உத்­த­ர­விட்­டால் பதவி வில­கத் தயார் என்­றும் இரு தினங்­க­ளுக்கு முன்பு அறி­வித்­தார் முதல்­வர் எடி­யூ­ரப்பா.

இந்­நி­லை­யில் நேற்று முதல்­வர் பத­வி­யில் இருந்து வில­கு­வ­தாக அவர் அறி­வித்­தார்.

"கர்­நா­ட­கா­வில் எனது அரசு பத­வி­யேற்று இன்­று­டன் இரண்டு ஆண்­டு­கள் நிறை­வ­டை­கின்­றன. முதல்­வர் பத­வி­யில் இருந்து விலக முடிவு செய்­துள்­ளேன். ஆளு­நரைச் சந்­தித்து எனது பதவி வில­கல் கடிதத்தை வழங்க உள்­ளேன்.

"அதன் பிறகு மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கை­களை பாஜக தலைமை முடிவு செய்யும். கட்­சிக்­காக விசு­வா­சத்­து­டன் தொடர்ந்து பணி­யாற்­று­வேன்," என்று கண்ணீர்மல்க தெரிவித்தார் எடி­யூ­ரப்பா.

இதையடுத்து கர்நாடகாவின் புதிய முதல்வர் யார் என்பது குறித்து பாஜக மேலிடம் உடனடியாக அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.