எல்லையில் எட்டு ஆளில்லா விமானங்கள் பறிமுதல்

1 mins read
cee9f0bb-cc55-4d2a-9ee4-aa3f262b569a
-

பாட்னா: நேப்­பா­ளத்­தில் இருந்து நேற்று முன்தினம் பீகார் எல்லை வழி­யாக இந்­தியா­வுக்­குள் நுழைந்த ஒரு­வ­ரி­டம் இருந்து 11 சிறிய ரக ஆளில்லா விமா­னங்­கள் (டிரோன்) பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

பினய் குமார் என்ற அந்த ஆட­வர் பீகா­ரின் எல்­லை­யோர மாவட்­ட­மான மது­பனி பகு­தி­யில் தடுத்து நிறுத்­தப்­பட்­ட­தா­க­வும் அவ­ரது காரை சோத­னை­யிட்­ட­போது ஆளில்லா விமா­னங்­கள் இருப்­பது தெரி­ய­வந்­தது என்­றும் பாது­காப்­புப் படை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

மது­ப­னி­யில் உள்ள ஒரு­வ­ரி­டம் ஒப்­ப­டைக்­கும் பொருட்டு அந்த சிறிய ரக விமா­னங்­களை காருக்­குள் மறைத்து வைத்து எடுத்து வந்­த­தாக முதற்­கட்ட விசாரணை­யின்­போது பினய் குமார் கூறி­ உள்­ளார். அவர் யாருக்­காக இச்­செ­யலில் ஈடு­பட்­டார், பீகா­ரில் ஏதே­னும் சதி வேலைக்கு திட்­ட­மிடப்­பட்­டுள்­ளதா என அதி­கா­ரி­கள் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

கடந்த ஜூன் 28ஆம் தேதி­யன்று பீகா­ரில் மூன்று கடத்­தல்­காரர்­க­ளி­டம் இருந்து எட்டு சிறிய ரக ஆளில்லா விமா­னங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.