மகாராஷ்டிரா: ராஜீவ் காந்தி பெயரில் தகவல் தொழில்நுட்ப விருது

மகாராஷ்டிரா: ராஜீவ் காந்தி பெயரில் தகவல் தொழில்நுட்ப விருது

1 mins read
55cb9808-09f5-4247-9a25-a2d1b31bd867
-

மும்பை: மகா­ராஷ்­டிரா அரசு சார்­பாக ஆண்­டு­தோ­றும் தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில் சிறந்து விளங்­கு­ப­வர்­க­ளைப் பாராட்டி விருது வழங்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், இந்த விரு­துக்கு முன்­னாள் பிர­த­மர் ராஜீவ் காந்­தி­யின் பெயர் சூட்­டப்­ப­டு­வ­தாக அம்­மா­நில முதல்­வர் உத்­தவ் தாக்­கரே தெரி­வித்­துள்­ளார்.

கடந்த 1984 முதல் 1989ஆம் ஆண்டு வரை இந்­தி­யப் பிர­த­ம­ராக பதவி வகித்­த­போது, ராஜீவ் காந்தி தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யின் வளர்ச்­சிக்கு வித்­திட்­டார் என்­றும் அந்­தப் பங்­க­ளிப்பை நினை­வூட்­டும் வகை­யில் இந்த விருது வழங்­கப்­படும் எனவும் மகா­ராஷ்­டிரா அரசு தெரி­வித்­துள்­ளது.

ராஜீவ் காந்தி பெய­ரில் ஏற்­கெ­னவே மத்­திய அரசு சார்­பாக, விளை­யாட்­டுத் துறை­யில் சாதிப்­ப­வர்­க­ளுக்கு கேல் ரத்னா விருது வழங்­கப்­பட்டு வந்­தது.

ஆனால் அண்­மை­யில் ராஜீவ் காந்­தி­யின் பெயர் மாற்­றப்­பட்டு அந்த விரு­துக்கு முன்­னாள் ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்த் பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.

இதற்கு காங்­கி­ரஸ் கட்சி எதிர்ப்பு தெரி­வித்த நிலை­யில், மகா­ராஷ்­டிரா அரசு புதிய விருதை அறி­வித்து, அதற்கு ராஜீவ் காந்தி பெய­ரைச் சூட்­டி­யுள்­ளது.

இவ்விருது ஆண்­டு­தோ­றும் ராஜீவ் காந்­தி­யின் பிறந்த நாளான ஆகஸ்ட் 20ஆம் தேதி வழங்­கப்­படும் என்­றும் நடப்­பாண்­டுக்­கான விருது அக்­டோ­பர் இறு­திக்­குள் வழங்­கப்­படும் என்­றும் அம்­மா­நில அரசு தெரி­வித்­துள்­ளது.