காதல் தொல்லை: கேரள அரசு எச்சரிக்கை

காதல் தொல்லை: கேரள அரசு எச்சரிக்கை

1 mins read
007816ad-06af-4afc-81b5-460d8a96263f
-

பெங்­க­ளூரு: காதலை ஏற்க மறுக்­கும் பெண்­களைத் துன்­பு­றுத்­தி­னால் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

அம்­மா­நி­லத்­தில் காதலை ஏற்க மறுக்­கும் இளம் பெண்­கள் பலர் தாக்­கு­த­லுக்கு ஆளா­கின்­ற­னர் என்­றும் சில பெண்­கள் கொடூ­ர­மா­கக் கொல்­லப்­பட்­டுள்­ள­னர் என்­றும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதை­ய­டுத்து, "காதல் என்ற பெய­ரில் பெண்­களைத் துன்­புறுத்து­வோ­ருக்கு ஆத­ர­வாக கேரள காவல்­துறை ஒரு­போ­தும் மென்­மை­யாக நடந்துகொள்­ளாது. காதலை ஏற்க மறுக்­கும் பெண்­க­ளுக்கு எதி­ராக அட்­டூ­ழி­யங்­களில் ஈடு­ப­டு­வோர் மீது கடும் நட­வ­டிக்கை பாயும்," என முதல்­வர் பின­ராயி விஜ­யன் சட்­டப்­பே­ர­வை­யில் தெரி­வித்­தார்.

கேரளாவில் கடந்த மாதம் இளம் மருத்துவ மாணவி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

குற்­ற­வா­ளி­க­ளுக்­குக் கடும் தண்­டனை வழங்­கப்­ப­டு­வது தொடர்ந்து உறுதி செய்­யப்­படும் என்று குறிப்­பிட்ட அவர், பெண்­களை அச்­சு­றுத்­து­வது, பின்­தொ­டர்­வது ஆகி­யவை குறித்து அளிக்­கப்­படும் புகார்­கள் மீது போலி­சார் உட­னுக்­கு­டன் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னார்.