கர்நாடகா பாஜகவில் சிக்கல்: அமைச்சர்கள் போர்க்கொடி

கர்நாடகா பாஜகவில் சிக்கல்: அமைச்சர்கள் போர்க்கொடி

1 mins read
b5e4f0c3-4296-4f75-8551-de18ef2ec939
-

பெங்­க­ளூரு: கர்­நா­டகா பாஜ­க­வில் மீண்­டும் உட்­கட்­சிப் பூசல் வெடித்­துள்­ளது. பாஜக அமைச்­சர்­கள் இரு­வர் எம்­எல்ஏ பத­வி­யில் இருந்து வில­கப்போவ­தாக அறி­வித்­துள்­ள­னர்.

கர்­நா­ட­கா­வில் புதிய முதல்­வ­ராக பச­வ­ராஜ் பொம்மை பத­வி­யேற்ற சில தினங்­க­ளி­லேயே அவ­ரது அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்­றுள்ள சிலர் தங்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட துறை­கள் மன­நி­றைவு அளிக்­க­வில்லை என போர்க்­கொடி உயர்த்தி உள்­ள­னர்.

குறிப்­பாக, ஆனந்த்­சிங், எம்­டிபி நாக­ராஜ் ஆகிய இரு­வ­ரும் தங்­க­ளுக்­கு­ரிய துறை­கள் மாற்றப்­பட­வில்லை எனில் எம்­எல்ஏ பத­வி­யில் இருந்து வில­கப்­போ­வ­தாக பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருப்­பது பர­ப­ரப்­பைக் கூட்­டி­யுள்­ளது.

ஆனந்த் சிங் உட­ன­டி­யாக அர­சி­ய­லில் இருந்து வில­கப்­போ­வ­தாகத் தெரி­வித்­துள்­ளார். மேலும், ஆளு­நரை நேரில் சந்­தித்து தமது பதவி வில­கல் கடி­தத்தை அளிக்­கப்­போ­வ­தா­க­வும் கூறி­யுள்­ளார். இத­னால் பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்­துள்­ள­தா­கத் தெரி­கிறது. அதி­ருப்­தி­யா­ளர்­களை சமா­தா­னப்­படுத்­தும் முயற்­சி­யில் மூத்த பாஜக தலை­வர்­கள் ஈடு­பட்­டுள்­ள­னர்.

அண்­மை­யில்­தான் உட்­கட்­சிப் பூசல் கார­ண­மாக கர்­நா­டகா முதல்­வர் பத­வி­யில் இருந்து எடி­யூ­ரப்பா வில­கி­னார். இப்­போது பச­வ­ராஜ் பொம்­மைக்­கும் சொந்­தக் கட்­சி­யி­ன­ரா­லேயே நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.