ஜிஎஸ்எல்வி உந்துகணை செலுத்தும் முயற்சியில் பின்னடைவு

ஜிஎஸ்எல்வி உந்துகணை செலுத்தும் முயற்சியில் பின்னடைவு

1 mins read
0349f6b8-0323-4ca6-9228-a28d9ca23476
-

ஸ்ரீஹ­ரி­கோட்டா: இந்­திய விண்­வெளி ஆராய்ச்சி நிறு­வ­னம் (இஸ்‌ரோ) விண்­ணில் செலுத்­திய 'ஜிஎஸ்­எல்வி - எஃப் 10' என்ற உந்துகணை, தொழில்­நுட்­பக் கார­ணங்­க­ளால் தனது இலக்கை எட்­ட­வில்லை என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அனைத்து முன்­னேற்­பா­டு­களும் துல்­லி­ய­மாக செய்­யப்­பட்­டதை அடுத்து நேற்று காலை ஸ்ரீஹ­ரி­கோட்­டா­வில் இருந்து அந்த உந்துகணை வெற்­றி­க­ர­மாக ஏவப்­பட்­டது.

எனி­னும் சதீஷ் தவான் விண்­வெளி நிலை­யத்­தில் இருந்து செலுத்­தப்­பட்ட உந்துகணை தனக்­குரிய வட்­டப்­பா­தைக்­குள் நுழை­வ­தற்­கும் முன்பே திடீர் தொழில்­நுட்பக் கோளாறு ஏற்­பட்­ட­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

குறிப்­பாக, உந்துகணையில் உள்ள கிரை­யோ­ஜெ­னிக் என்ற 'இன்­ஜின்' பகு­தி­யில்­தான் இந்­தக் கோளாறு ஏற்­பட்­டது என்று இஸ்ரோ தலை­வர் சிவன் தெரி­வித்­த­தாக 'பிபிசி தமிழ்' குறிப்­பிட்­டுள்­ளது.

முன்­ன­தாக உந்துகணை விண்­ணில் செலுத்­தப்­பட்­ட­தும் அந்த மகிழ்ச்­சியை டுவிட்­ட­ரில் வெளிப்­படுத்­தி­யது இஸ்ரோ நிர்­வா­கம். பின்­னர் சில நிமி­டங்­க­ளி­லேயே தொழில்­நுட்­பக் கோளா­றால் பின்­ன­டைவு ஏற்­பட்­ட­தா­க தெரிவிக்கப்பட்­டது.

இந்த உந்துகணையை விண்­ணில் செலுத்த ஏற்­கெ­னவே இரு­முறை திட்­ட­மிட்ட போதும் கால­நிலை, தொழில்­நுட்­பக் கோளா­று­கள் கார­ண­மாக தள்ளிவைக்­கப்­பட்­ட­தா­கத் தெரிய வந்­துள்­ளது. இந்த உந்துகணை 2,268 கிலோ எடை­கொண்ட ஒரு செயற்­கைக்­கோளை சுமந்து சென்­றது. இத்திட்­டம் மீண்டும் செயல்­ப­டுத்தப்படும் என மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.