புதுடெல்லி: நாடெங்கும் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 55 கோடியைக் கடந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் பக்கப் பதிவில், ''நாடு முழுவதும் போடப்பட்ட கொரோனா தடுப்பூசியின் எண்ணிக்கை சாதனை படைக்கும் விதமாக 55 கோடியைக் கடந்து விட்டது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மேலும் வலுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்வோம்,'' என்று குறிப்பிட்டுள்ளாா்.
கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை வலுப்படுத்துவோம்; அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு மற்றவர்களையும் பாதுகாப்போம்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா

