காபூலில் 1,500 இந்தியர்கள் தவிப்பு

காபூலில் 1,500 இந்தியர்கள் தவிப்பு

2 mins read
bd2db1e4-8e78-41f6-9bbf-cc6837d977ba
-

திரு­வ­னந்­த­பு­ரம்: தலி­பான் வச­மா­கி­ விட்ட ஆப்­கா­னிஸ்­தா­னில் சிக்­கி­ இ­ருக்­கும் ஆயி­ரக்­க­ணக்­கான இந்­தி­யர்­கள் நாடு திரும்­பும் வழி­ அ­றி­யாது தவித்து வருவதாகக் கூறப்­படு­கிறது.

ஆப்­கான் தலை­ந­கர் காபூ­லில் இருந்து இந்­தி­யத் தூத­ரும் தூத­ரக அதி­கா­ரி­களும் இரண்டு இரா­ணுவ விமா­னங்­கள் மூல­மாக பாது­காப்­பாக இந்­தி­யா­விற்கு அழைத்து வரப்­பட்­டு­விட்­ட­னர்.

இத­னை­ய­டுத்து, நாடு திரும்ப யாரைத் தொடர்­பு­கொள்­வது என்று தெரி­யா­மல், எதிர்­கா­லம் குறித்­து அனைவரும் கவலை அடைந்­து இ­ருப்­ப­தாக காபூலில் இருக்­கும் 29 வயது கேரள இளை­யர் ஒரு­வர் கூறி­ய­தாக 'நியூ இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்' செய்தி தெரி­விக்­கிறது.

"நிலைமை நாளுக்கு நாள் மோச­மாகி வரு­கிறது. இங்­குள்ள இந்­தி­யர்­கள் தக­வல் பரி­மா­றிக்­கொள்­வதற்­காக வாட்ஸ்­அப் குழுவை உரு­வாக்­கி­யுள்­ளோம். இது­வரை 41 கேரள மாநி­லத்­த­வரை அடை­யா­ளம் கண்­டுள்­ளோம். எங்­க­ளது மதிப்­பிட்டபின்டி, காபூ­லில் மட்­டும் 1,500க்கும் மேற்­பட்ட இந்­தி­யர்­கள் இருக்­க­லாம்," என்­றார், உண­வுப் பதப்­ப­டுத்­தும் அமெரிக்க நிறு­வ­ன­மொன்­றில் வேலை செய்­து­வ­ரும் அந்த ஆட­வர்.

இந்­தி­யர்­கள்­மீது தாக்­கு­தல் நடந்­த­தாக எந்­தத் தக­வ­லும் பகி­ரப்­ப­ட­வில்லை என்­றார் அவர்.

தாம் தங்­கி­யுள்ள கட்­ட­டத்­திற்­குப் பின்­னால் உள்ள கட்­ட­டத்­திற்கு நேற்று முன்­தி­னம் வந்த தலி­பான் படை­யி­னர், முந்­திய ஆப்­கான் அர­சாங்க ஆத­ர­வா­ளர்­கள் எவ­ரும் உள்­ள­னரா என்று தேடி­ய­தா­க­வும் அவர்­கள் செல்­லும்­வரை தாம் ஒரு மேசை­யின் அடி­யில் பதுங்கி இருந்­த­தா­க­வும் அந்த ஆட­வர் சொன்­னார்.

இப்­போ­தைய சூழ­லில் உண­வை­விட ஆப்­கான் பெண்­க­ளின் பாரம்­ப­ரிய உடை­யான 'புர்கா'விற்­குத்­தான் மிகுந்த தேவை இருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 தொற்று குறித்து யாரும் கவ­லைப்­ப­ட­வில்லை என்ற அவர், இந்­திய ஊழி­யர்­க­ளு­டன் பெண்­களும் குழந்­தை­களும் இருப்­ப­தால் உட­ன­டி­யாக அங்­கி­ருந்து வெளி­யே­றும் வழியை ஆராய்ந்து வரு­வ­தா­க­வும் சொன்­னார்.

'அனைவரும் மீட்கப்படுவர்'

இந்­நி­லை­யில், ஆப்­கா­னிஸ்­தா­னில் உள்ள இந்­தி­யர்­கள் அனை­வ­ரை­யும் பாது­காப்­பாக மீட்க கடப்­பாடு கொண்­டுள்­ள­தாக இந்­திய வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

தூத­ரக அதி­கா­ரி­கள் அனை­வரும் பாது­காப்­பாக நாடு திரும்­பி­விட்ட நிலை­யில், இனி ஆப்­கா­னில் உள்ள இந்­தி­யக் குடி­மக்­களை அழைத்து வரு­வ­தில் கவ­னம் செலுத்­தப்­படும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது. காபூல் விமான நிலை­யம் மீண்­டும் திறக்­கப்­பட்­ட­தும் சிறப்பு விமா­னங்­களை இயக்க ஏற்­பா­டு­கள் செய்­யப்­படும் என்று அமைச்சு கூறி­யி­ருக்­கிறது.