மேற்கு வங்கத் தேர்தல் வன்முறை: சிபிஐ விசாரணை

மேற்கு வங்கத் தேர்தல் வன்முறை: சிபிஐ விசாரணை

2 mins read
823a5875-29d4-45e0-8baa-c172927786db
-

கோல்­கத்தா: மேற்கு வங்க சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லின்­போது நிகழ்ந்த வன்­முறை தொடர்­பாக சிபிஐ விசா­ர­ணைக்கு கோல்­கத்தா உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

சிபிஐ விசா­ர­ணைக்கு மாநில அரசு உரிய ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை எனில் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என­வும் எச்­ச­ரித்­துள்­ளது.

மேற்கு வங்­கத்­தில் நடந்து முடிந்த சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் முதல்­வர் மம்தா பானர்ஜி தலை­மை­யி­லான திரி­ணா­முல் காங்­கி­ரஸ் வெற்றி பெற்று மீண்­டும் ஆட்சி அமைத்­துள்­ளது.

தேர்­தல் முடி­வு­கள் அறி­விக்­கப்­பட்ட போது திரி­ணா­முல் காங்­கி­ரஸ், பாஜ­க­வி­னர் இடையே மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் மோதல் வெடித்­தது.

அப்­போது பாஜ­க­வி­னர் குறி­வைத்து தாக்­கப்­பட்­ட­தா­க­வும் சிலர் கொல்­லப்­பட்­ட­தா­க­வும் புகார் எழுந்­தது. வன்­மு­றை­யின் முடி­வில் மொத்­தம் பத்து பேர் பலி­யா­ன­தாக அரசு தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

ஏரா­ள­மான பாஜ­க­வி­னர் படு­கா­யம் அடைந்­தி­ருப்­ப­தா­க­வும் பல பாலி­யல் வன்­கொ­டு­மைச் சம்­பவங்கள் நிகழ்ந்­த­தா­க­வும் அக்­கட்சி சாடி­யது.

இது குறித்து உயர் நீதி­மன்­றத்­தில் பொது­நல வழக்­கு­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டன. அவற்றை விசா­ரித்த நீதி­மன்­றம், தேசிய மனித உரிமை ஆணை­யம் விசா­ரணை நடத்த உத்­த­ர­விட்­டது.

இதை­ய­டுத்து நடை­பெற்ற விசா­ர­ணை­யின் முடி­வில் சிபிஐ விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட வேண்­டும் என தேசிய மனித உரிமை ஆணை­யம் பரிந்­து­ரைத்­தது.

இந்­நி­லை­யில், வன்­முறை தொடர்­பான வழக்­கு­களை சிபிஐ விசா­ரிக்க வேண்­டும் என கோல்­கத்தா உயர் நீதி­மன்­றம் நேற்று அதி­ரடி உத்­த­ர­வைப் பிறப்­பித்­தது. இதற்­காக சிபிஐ சிறப்­புக்­குழு அமைக்க வேண்­டும் என்­றும் வழக்­கு­கள் தொடர்­பான அனைத்து ஆவ­ணங்­க­ளை­யும் மாநில அரசு சிபி­ஐ­யி­டம் ஒப்­ப­டைக்க வேண்­டும் என்­றும் நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

இந்த உத்­த­ரவை வர­வேற்­ப­தாக மத்­திய அமைச்­சர் அனு­ராக் தாகூர் தெரி­வித்­துள்­ளார். நீதி­மன்­றத்­தின் உத்­த­ர­வால் ஜன­நா­ய­கத்­தில் வன்­மு­றைக்கு இட­மில்லை என்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில், நீதி­மன்ற உத்­த­ரவு ஏமாற்­றம் அளிப்­ப­தா­க­வும் தேவைப்­பட்­டால் இத்­தீர்ப்பு குறித்து மேல்­மு­றை­யீடு செய்­யப்­படும் என்­றும் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் தெரி­வித்­துள்­ளது.