செப்டம்பருக்குப் பிறகு குழந்தைகளுக்கும் தடுப்பூசி

செப்டம்பருக்குப் பிறகு குழந்தைகளுக்கும் தடுப்பூசி

1 mins read
323aa605-07a3-4b77-92d4-e84cecc6d7ff
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் செப்­டம்­பர் இறுதி அல்­லது அதற்­குப் பின்பு குழந்­தை­க­ளுக்­கும் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை தொடங்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

குழந்­தை­க­ளுக்குப் போடக்­கூடிய கோவேக்­சின் தடுப்­பூசி தற்­போது இரண்டு, மூன்­றாம் கட்ட பரி­சோ­த­னை­யில் உள்­ளது. அதன் முடிவு சாத­க­மாக இருக்­கும் பட்­சத்­தில், இரண்டு முதல் 18 வய­து­டை­ய­வர்­க­ளுக்குத் தடுப்­பூசி போடு­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­படும் என்று தேசிய தொற்று நோய் மையத்­தைச் சேர்ந்த மருத்­து­வர் பிரியா அப்­ர­ஹாம் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தி­யா­வில் நேற்று முன்­தி­னம் 36,401 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யுள்­ளது. 530 பேர் பலி­யா­கி­விட்­ட­னர். எனி­னும், கடந்த ஐந்து மாதங்­களில் முதல் முறை­யாக அன்­றா­டம் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் வாராந்­திர சரா­சரி எண்­ணிக்கை 35 ஆயி­ரத்­துக்­கும் குறை­வா­கப் பதி­வாகி உள்­ளது.

இதற்­கி­டையே, கேர­ளா­வில் கிரு­மித்­தொற்­றுப் பாதிப்பு மீண்­டும் அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த புதன்­கி­ழமை ஒரே நாளில் அங்கு மேலும் 21,427 பேருக்கு தொற்று ஏற்­பட்­டுள்­ளது. 179 பேர் பலி­யாகி உள்­ள­னர்.

இதன் மூலம் பலி­யா­னோர் எண்­ணிக்கை 19,049ஆக அதி­க­ரித்­துள்­ளது. அதே சம­யம் புதன்­கி­ழமை அன்று 18,731 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர்.

நாடு முழு­வ­தும் சுமார் 500 மில்­லி­யன் மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­பட்­டுள்­ளன. இது­வரை 565 மில்லியன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ளன.

இதற்கிடையே, ஐநா அமைதி காக்கும் பிரிவைச் சேர்ந்தவர்களுக்காக இந்தியா 200,000 தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி உள்ளது.