வீட்டைவிட்டு ஓடிய 477 சிறுவர், சிறுமிகள் மீட்பு

வீட்டைவிட்டு ஓடிய 477 சிறுவர், சிறுமிகள் மீட்பு

1 mins read
a10bd23e-ec88-4da0-b845-edd6f188e848
-

புனே: மகா­ராஷ்­டி­ரா­வில் வீட்­டை­விட்டு ஓடிய 477 சிறு­வர், சிறு­மி­கள் ரயில் நிலை­யங்­க­ளி­லி­ருந்து மீட்­கப்பட்­டுள்­ள­னர்.

கடந்த ஜன­வரி முதல் ஜூலை வரை­யி­லான கால­கட்­டங்­களில் ரயில்வே நடைேமடை பகு­தி­க­ளி­லி­ருந்து 477 சிறு­வர், சிறு­மி­களை ரயில்வே பாது­காப்­புப் படை­யி­னர் மீட்­டுள்­ள­தாக மத்­திய ரயில்வே வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

இதன்­படி மீட்­கப்­பட்­ட­வர்­களில் 310 பேர் சிறு­வர்­கள், 167 பேர் சிறு­மி­கள். அவர்­கள் அரசு சாரா அமைப்­பு­க­ளின் உத­வி­யு­டன் பெற்­றோர் அல்­லது பாது­கா­வ­ல­ரி­டம் சேர்க்­கப்­பட்­டுள்ளனர்.

அவர்­களில் பலர் தங்­க­ளது குடும்­பத்­தி­ன­ரி­டம் சண்­டை­யிட்­டு­விட்டு அவர்­க­ளி­டம் எது­வும் கூறா­மல் வீடு­களில் இருந்து வெளி­யே­றி­ய­வர்­கள்.

ரயில் நடை­மேடை பகு­தி­க­ளி­லும் சில நேரங்­களில் ரயில்­க­ளி­லும் அவர்­கள் சுற்றித் திரிந்­து வந்துள்ள னர்.