தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோடிக்கு இருபது ஆண்டுகளாக ராக்கி கயிறு அனுப்பும் பாகிஸ்தான் சகோதரி

2 mins read
caf60798-6e12-4fcd-a600-48328f4c601d
குவாமர் மோசின் ஷேக் விரைவில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ராக்கி கட்ட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளார். படம்: ஏஎன்ஐ -

புது­டெல்லி: வட­இந்­தி­யா­வில் ரக்‌ஷா பந்­தன் பண்­டிகை வெகு ­வி­ம­ரி­சை­யா­கக் கொண்­டா­டப்­ப­டு­கிறது. உலகம் முழு­வ­தும் உள்ள இந்­தி­யர்­களும் இவ்­வி­ழாவை சிறப்­பா­கக் கொண்­டாடி வரு­கின்­ற­னர்.

இந்­தப் பண்­டிகை நாளில் உடன் பிறந்த, உடன் பிறவா சகோ­த­ரர் ­க­ளின் மணிக்­கட்­டில் ராக்கி கயிற்­றைக் கட்டி பெண்­கள் சகோ­தர உணர்வை வெளிப்­ப­டுத்­து­வர்.

அந்த வகை­யில் பாகிஸ்­தா­னைச் சேர்ந்த சகோ­தரி ஒரு­வர், பிர­த­மர் மோடிக்கு கடந்த 20 ஆண்­டு­ க­ளுக்­கும் மேலாக ராக்கி கயிறு, வாழ்த்து அட்டை ஆகி­ய­வற்றை அனுப்பி வாழ்த்து தெரி­வித்து வரு­கி­றார்.

பாகிஸ்­தா­னைச் சேர்ந்த குவா­மர் மோசின் ஷேக் என்ற இந்­தப் பெண் திரு­ம­ணம் முடிந்த பிறகு இந்­தி­யா­வில் குடி­யே­றி­னார்.

தற்­போது குஜ­ராத்­தின் அக­ம­தா­பாத் நக­ரில் இவர் வசித்து வரு­கி­றார்.

பிர­த­மர் மோடி ஆர்­எஸ்­எஸ் அமைப்­பில் ஊழியராக இருந்த காலத்­திலிருந்து அவ­ருக்கு ரக்‌ஷா பந்­தன் நாளை முன்­னிட்டு ராக்கி கயிறு, வாழ்த்து அட்­டை­களை வழங்கி ஆசி பெற்று வரு­கி­றார்.

ஆனால் மோடி குஜ­ராத் முதல்­வ­ரான பிற­கும் பிர­த­ம­ரா­ன பிற­கும் அவரை சந்­திக்க முடி­ய­வில்லை என்­ப­தால் தபால் மூலம் ராக்கி கயிறு, வாழ்த்து அட்­டை­களை மோசின் ஷேக் அனுப்பி வரு­கி­றார்.

இம்­மா­தம் 22ஆம் தேதி(நாளை) ரக்‌ஷா பந்­தன் பண்­டிகை கொண்­டா­டப்­ப­டு­கிறது. இதை­யொட்டி பிர­த­மர் மோடிக்கு ராக்கி கயிறு, வாழ்த்து அட்­டை­களை இவர் அனுப்­பி­யுள்­ளார்.

இது பற்றி பேட்­டி­ய­ளித்த குவாமர் மோசின், "என் சகோ­த­ரர் மோடிக்கு ரக்‌ஷா பந்­தன் வாழ்த்­து­கள். ஒவ்­வொரு நாளும் அவ­ரின் நலத்­துக்­கா­கப் பிரார்த்­திக்­கி­றேன்," என்றார்.

"விளை­யாட்டு வீரர்­க­ளு­டன் சமீ­பத்­தில் பிர­த­மர் மோடி பேசி­யதை ஒளி­வ­ழி­களில் பார்த்­தேன். ஒரு விளை­யாட்டு வீர­ரின் தாயான என்­னை­யும் என் குடும்­பத்­தா­ரை­யும் பிர­த­மர் மோடி டெல்­லிக்கு அழைத்து ராக்கி கயிறு கட்­டச் சொல்­லு­வார் என நம்­பு­கி­றேன்.

"என்­னு­டைய மகன் சூபி­யான் ஷேக், உல­கி­லேயே இளம் வயது நீச்­சல் வீரர். பல விரு­து­க­ளை­யும், பதக்­கங்­க­ளை­யும் வென்­றுள்­ளார்," என்று அவர் தெரிவித்தார்.

"நான் முதன்­மு­த­லில் ரக்‌ஷா பந்­தனை மோடி­யு­டன் 20 ஆண்­டு­ க­ளுக்கு முன் கொண்­டா­டி­னேன். அப்­போது ஆர்­எஸ்­எஸ் தொண்­ட­ராக மோடி இருந்­தார்.

"கடந்த 20 ஆண்­டு­க­ளாக பிர­த­மர் மோடிக்கு ராக்கி கயிறு கட்ட முயற்சி செய்து வரு­கி­றேன்," என்று குவா­மர் மோசின் ஷேக் தெரி­வித்­துள்ளார்.

ரக்‌ஷா பந்­தன் பண்­டி­கை­யை­யொட்டி சகோ­த­ரி­கள் தங்­கள் சகோ­த­ரர்­க­ளுக்கு ராக்கி கயிறு கட்டி ஆசி பெறு­வார்­கள். அப்­போது பணம், நகை, பரிசு ஆகி­ய­வற்றை சகோ­த­ரி­க­ளுக்கு சகோ­த­ரர்­கள் அன்­ப­ளிப்­பாக வழங்குவது வழக்கங் களில் ஒன்று.