உலகின் முதல் டிஎன்ஏ கொவிட்-19 தடுப்பூசி

உலகின் முதல் டிஎன்ஏ கொவிட்-19 தடுப்பூசி

2 mins read
19ef15de-cbfa-4df2-ad34-6584a5565b4d
-

12 வயதிற்கு மேற்பட்டோர்க்குச் செலுத்த இந்தியா அனுமதி

புது­டெல்லி: அவ­ச­ர­கா­லங்களில் ஸைடஸ் கேடிலா நிறு­வ­னத்­தின் ஸைகொவ்-டி கொவிட்-19 தடுப்­பூசியைப் பயன்­ப­டுத்த இந்­திய மருந்­துக் கட்­டுப்­பாட்டு ஆணை­யம் அனு­மதி அளித்­துள்­ளது.

'டிஎன்ஏ' மர­பணு மூலக்­கூறு அடிப்­ப­டை­யில் உல­கி­லேயே முதன்­மு­றை­யாக உரு­வாக்­கப்­பட்­டுள்ள இந்­தத் தடுப்­பூ­சியை 12 வய­துக்கு மேற்­பட்ட குழந்­தை­க­ளுக்­கும் பெரி­ய­வர்­க­ளுக்­கும் செலுத்த முடி­யும். இந்த ஸைகொவ்-டி தடுப்­பூ­சியை மூன்று தவ­ணை­கள் போட்­டுக்­கொள்ள வேண்­டும்.

இந்­தி­யா­வில் அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்ள ஆறா­வது கொவிட்-19 தடுப்­பூசி இது.

நாடு முழு­வ­தும் 28,000க்கு மேலா­னோ­ரி­டம் மேற்­கொள்­ளப்­பட்ட இறு­திக்­கட்டச் சோதனை மூலமாக, அறி­கு­றி­யு­டன் கூடிய கொரோனா தொற்­றுக்கு எதி­ராக ஸைகொவ்-டி தடுப்­பூசி 66.6% செயல்­தி­ற­னைக் கொண்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

அக­ம­தா­பாத் நகரை மைய­மா­கக் கொண்ட ஸைடஸ் கேடிலா நிறு­வ­னம், இந்­திய உயிர்­தொ­ழில்­நுட்­பத் துறை­யு­டன் இணைந்து இந்­தத் தடுப்­பூ­சியை உரு­வாக்கி இருக்­கிறது. பாரத் பயோ­டெக் நிறு­வ­னத்­தின் கொவேக்­சின் தடுப்­பூ­சிக்­குப் பிறகு, உள்­நாட்­டி­லேயே உரு­வாக்­கப்­பட்டு, அவ­ச­ர­கா­லப் பயன்­பாட்டு அனு­மதி பெற்ற இரண்­டா­வது தடுப்­பூசி இது.

ஸைகொவ்-டி தடுப்­பூசி, புதிய உரு­மா­றிய கொரோனா கிரு­மி­களுக்கு, குறிப்­பாக டெல்டா கிரு­மிக்கு எதி­ரா­கச் செயல்­தி­றன்­மிக்­கது என்று கடந்த மாதம் ஸைடஸ் கேடிலா நிறு­வ­னம் தெரி­வித்­தி­ருந்­தது. வழக்­க­மான ஊசி­களில் மருந்தை ஏற்­றிச் செலுத்­தும்­ப­டி­யாக இல்­லா­மல், ஊசி­யில்­லாக் கருவி மூலம் இத்­த­டுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம் என்­றும் அந்­நி­று­வனம் கூறி­யது.

இரு­முறை போடக்­கூ­டிய தடுப்­பூ­சிக்கு அனு­மதி கோர­வும் ஆண்­டிற்கு 100-120 மில்­லி­யன் தடுப்­பூசி­க­ளைத் தயா­ரிக்­க­வும் அந்த நி­று­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ளது.

மேலும் 375 பேர் உயிரிழப்பு

இதற்­கி­டையே, கடந்த 24 மணி நேரத்­தில் இந்­தி­யா­வில் புதி­தாக 34,457 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது; மேலும் 375 பேர் மாண்­டு­விட்­ட­னர். இப்­போ­தைக்கு, 361,340 பேர் கொரோனா தொற்­றுக்­குச் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.