150 இந்தியர்கள் கடத்தலா? தலிபான் மறுப்பு

150 இந்தியர்கள் கடத்தலா? தலிபான் மறுப்பு

2 mins read
37b7d7f8-c688-4a1f-b282-fb7153fdd79a
-

புது­டெல்லி: காபூல் விமான நிலை­யத்­தைச் சுற்­றிய பகு­தி­களில் இருந்து 150க்கு மேற்­பட்டோரை தலி­பான் படை­யி­னர் பிடித்து வைத்­துள்­ள­தா­க­வும் அவர்­களில் பெரும்­பாலோர் இந்­தி­யர்­கள் என்­றும் பல்­வேறு ஊட­கங்­களில் தக­வல் வெளி­யா­னது.

இத­னை­ய­டுத்து, காபூ­லில் உள்ள இந்­தி­யர்­கள் அனை­வ­ரும் பாது­காப்­பாக இருப்­ப­தாக இந்­திய அர­சாங்க வட்­டா­ரங்­கள் கூறின.

இருப்­பி­னும், காபூ­லில் கிட்­டத்­தட்ட 150 இந்­தி­யர்­கள் கடத்­தப்­பட்­ட­தாக வெளி­யான தக­வலை தலி­பான் பேச்­சா­ளர்­களில் ஒரு­வரான அக­ம­துல்லா வசெக் மறுத்­தார்.

காபூ­லின் ஹமீத் கர்­சாய் விமான நிலை­யத்­தைச் சுற்றி தலி­பான் படை­யி­னர் இருப்­ப­தா­க­வும் அவர்­கள் பொது­மக்­களை விமான நிலை­யத்­தில் நுழைய விடு­வ­தில்லை என்று அவர் கூறி­ய­தாக உள்­ளூர் ஊட­கம் ஒன்று தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யக் குடி­மக்­கள் அனை­வரும் பாது­காப்­பாக இருப்­ப­தா­க­வும் அதி­கா­ரி­கள் அவர்­க­ளு­டன் தொடர்­பில் இருப்­ப­தா­க­வும் இந்­திய அர­சாங்­கம் தெரி­வித்து இருக்­கிறது. விமான நிலை­யத்­திற்கு வெளியே தவித்­த­படி இருக்­கும் இந்­தி­யர்­கள் பாது­காப்­பாக நாடு திரும்ப வழி­வகை செய்ய அதி­கா­ரி­கள் குழு ஒன்று உதவி வரு­வ­தா­க­வும் கூறப்­படு­கிறது.

காபூல் விமான நிலை­யத்­திற்கு வெளியே 100-150 இந்­தி­யர்­களை தலி­பான் கடத்­திச் சென்­று­விட்­ட­தாக செய்­தி­யா­ளர்­கள் பலர் கூறி­னர். சமூக ஊட­கங்­களில் இத்­த­க­வல் வெளி­யான சற்று நேரத்­திற்­குப் பிறகு, இந்­தி­யர்­கள் அனை­வ­ரும் பாது­காப்­பாக இருப்­ப­தா­க­வும் அவர்­கள் காபூல் விமான நிலை­யத்­திற்­குத் திருப்பி அனுப்­பப்­பட்­ட­தா­க­வும் உள்­ளூர் செய்­தி­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

முன்னதாக, இந்திய விமானப் படை விமானம் மூலமாக 85 இந்தியர்கள் சொந்த நாட்டிற்கு மீட்டு வரப்பட்டனர். அவர்களுடன் இந்­தியா செல்ல முயன்ற ஆப்­கான் சீக்­கி­யர்­கள், இந்­துக்­கள் 72 பேரைத் தலி­பான் தடுத்து நிறுத்­தியதாக 'இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்' செய்தி கூறியது.

தூதரக வாகனங்கள் தலிபான்வசம்

இவ்­வே­ளை­யில், ஆப்கானின் கந்­த­கார், ஹெராத் நகர்­களில் உள்ள இந்­தி­யத் துணைத் தூத­ர­கங்­க­ளுக்­குள் நுழைந்த தலி­பான், அங்­கு­இருந்த ஆவ­ணங்­க­ளை­யும் அங்கு நிறுத்­தப்­பட்­டி­ருந்த வாக­னங்­க­ளை­யும் எடுத்­துச் சென்­ற­தா­கக் கூறப் படு­கிறது. இம்­மா­தம் 15ஆம் தேதி காபூல் நக­ரைத் தலி­பான் கைப்­பற்­றி­ய­பின், கந்­த­கார், ஹெராத், மசார்-இ-ஷரிஃப், ஜலா­லா­பாத் ஆகிய நக­ரங்­களில் இந்­தி­யத் துணைத் தூத­ர­கங்­கள் மூடப்­பட்­டன.